traffic analytics

சனி, 30 மே, 2009

Make u a happy man ..........today itself ....!

A management consultant, on holiday in an African fishing village, watched a little fishing boat dock at the quayside. Noting the quality of the fish, the consultant asked the fisherman how long it had taken to catch them.

"Not very long." answered the fisherman.

"Then, why didn't you stay out longer and catch more?" asked the consultant.

The fisherman explained that his small catch was sufficient to meet his needs and those of his family.

The consultant asked, "But what do you do with the rest of your time?"

"I sleep late, fish a little, play with my children, and have an afternoon's rest under a coconut tree. In the evenings, I go into the community hall to see my friends, have a few beers, play the drums, and sing a few songs... I have a full and happy life,” replied the fisherman.

The consultant ventured, "I have an MBA from Harvard and I can help you... You should start by fishing longer every day. You can then sell the extra fish you catch. With the extra revenue, you can buy a bigger boat. With the extra money the larger boat will bring, you can buy a second one and a third one and so on until you have a large fleet. Instead of selling your fish to a middleman, you can negotiate directly with the processing plants and maybe even open your own plant. You can then leave this little village and move to a city here or maybe even in the United Kingdom, from where you can direct your huge enterprise."

"How long would that take?" asked the fisherman.

"Oh, ten, maybe twenty years." replied the consultant.

"And after that?" asked the fisherman.

"After that? That's when it gets really interesting, " answered the consultant, laughing, "When your business gets really big, you can start selling shares in your company and make millions!"

"Millions? Really? And after that?" pressed the fisherman.

"After that you'll be able to retire, move out to a small village by the sea, sleep in late every day, spend time with your family, go fishing, takeafternoon naps under a coconut tree, and spend relaxing evenings having drinks with friends..."

வியாழன், 28 மே, 2009

எங்க ஊர் பரிசல் கேப்டன் ..விஜயகாந்த்...!


தயவு செய்து தயாரிப்பாளர் யாரும் புது படத்துக்கு கேப்டனை புக் பண்ணிடாதிங்க.அப்புறம் கிடைச்ச முன் பணத்துல கேரவனைப் பிடித்து டீசல் போட்டு ஊரெல்லாம் சுற்றி தன்னைப் போலவே தமிழ்நாட்டையும் ,அதன் எதிர்காலத்தையும் கருப்பாக்க முயற்சி செய்வார்.

தனியாக நின்று ஆளும் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார் என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுகின்றது.அதையும் தாண்டி அக் கட்சி வேட்பாளர்கள் நிலை....எதை நம்பி அந்தக் கட்சியில் சீட் கேட்டார்கள் எனத்தெரியவில்லை.எத்தனை கைப்புள்ளைகைகள்.....!கேப்டனை உசுப்பேத்தி வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டம்.கூட நின்ற வருத்தப் படாத வாலிபர் சங்க நிர்வாகிகளையும் உசுப்பேத்த ஒரு கூட்டம்.

ஓட்டுப்போட்டவர்கள் எதை சாதித்தார்கள்.பிரிச்சோம்ல...................அது ஒன்னுதான் மிச்சம்.ஓட்டுக்களை எங்களுக்கு போடுங்கள் எனக் கேட்பதை விட, இந்தமாதிரி வெட்டிகளுக்கு போடாதீர்கள் எனக் கேட்பதுதான் நல்லது.இல்லை என்றால் தமிழகத்தின் எதிர்காலமே டரியலாகி விடும்.

தமிழகத்திற்கு நல்லது செய்ய அவர் நினைத்தால்....... ஒரு யதார்த்தத்தை யோசிக்கட்டும்.சுய பரிசோதனைப் போல.இதுவரை அவர் நாட்டுக்கு செய்த நல்ல விஷயங்கள் என்ன?சுய விளம்பரம் பிடிக்கவில்லை என சொல்லி சொல்லி , தான் படிப்புக்கு உதவி செய்வதை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தாயிற்று. அப்படி பட்டவர் இலவச கல்வி நிறுவனமா நடத்துகிறார்?

திரை உலகின் கதாநாயகன் என்கிற ஒரு அந்தஸ்த்து மட்டும் போதுமா.எம்.ஜி.ஆரைப் பற்றி பேசக் கூட தகுதி இல்லாதவர்கள் அவரின் இடத்த்திற்கு வர முயல்வதை என்னவென்று சொல்வது?அதனால் கிடைக்கும் ஓட்டுகள் ,எதற்கு பயன் படுகிறது.மக்களின் எதார்த்தத்தைக் கொன்று ,விரும்பாத ஆட்சி மீண்டும் வர உதவி இருக்கிறது.

ஆளும் கட்சிக்கு எவ்வளவு எதிர்ப்புகள்.அவ்வளவையும் தாண்டி ஜெயிக்க இவரும் ஒரு இமாலய காரணம்.அது மட்டும்தான் அவரின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக பிற கட்சிகளுடன் சேராமல் தனியாகத்தான் முகாரி பாடிக் கொண்டிருப்பார்.

தனியாக நின்றால் டெபாஸிட் காலியாகும் எனத் தெரிந்தே நிற்பதன்நோக்கம்,ஆளும் கட்சியின் ஐந்தாம் படை என்கிற நிலையா?அப்பா.....!சினிமாவைத தவிர வெளியில் நன்றாகத் தான் நடிக்கிறார்கள்.ஓட்டுப் போட்டவனும் ,பின்னால் சென்று கூத்தாடி சீட் பிடித்து கை காசை செலவழித்த தொண்டனும்தான் ஏமாளி........!

அடுத்த தேர்தலுக்கு முன்னாவது உண்மை நிலை வெளிவந்தால் நல்லது.இல்லை என்றால் மீண்டும் எதிர் பாராத ஒரு தேர்தல் முடிவுதான் கிடைக்கும் மக்களின் வெறுப்போடு.

எங்கோ படித்த நினைவு..இப்படியே போனால் கஞ்சித்தொட்டி திறக்கும் நிலை கேப்டனின் கட்சிக்கு வரும் என்று....!

போதும்இதோட நிறுத்திக்குவோம்....................!

முடியல..........!

ஓன்று மட்டும் உறுதி...கட்ட துரைக்கு கட்டம் சரி இல்ல.................!(கட்டதுரையை நம்பியவர்களுக்கு நேரம் சரி இல்ல)

செவ்வாய், 26 மே, 2009

மாயை...கீதையின் சாரம்


ஸர்வேந்த்ரியக்ணோபாஸம் ஸர்வேந்ரிய விவர் ஜிதம் //
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோ க்த்ரு ச //14



இந்திரியங்கள் அணைத்தின் வாயிலாக ஒளிர்வது,இந்திரியங்கள் யாவையும் அற்றது, பற்றற்றது,அனைத்தினையும் பற்றித் தாங்குவது.குணங்களே இல்லாதது எனினும் குணங்களை அனுபவிப்பது:

பல வடிவங்களை காணுதர்க்குப் பகல் வேளை உதவுகின்றது.ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொருளை விளக்க உதவுகின்றது.பல பொருட்களின் விளக்கமாக சூரியன் விளங்குகின்றது.மேலும் சூரிய வெளிச்சம் இவ்வடிவங்கள் யாவையும் அற்றது.அவ்வடிவங்களில் அது பற்றற்று இருக்கிறது.ஆத்மா சைதன்யம் இந்திரியங்களில் அத்தகைய தொடர்வுடையதாய் இருக்கின்றது.சினிமாத் திரை ஆனது படங்களை எல்லாம் தாங்குகின்றது போல சிதாகாசம் ஜகத்திலுள்ள அணைத்தையும் தாங்குகின்றது.படத்தில் காணும் விதவிதமான வர்ணங்கள் திறையினுடைய வர்ணங்கள் அல்ல.ஆனால் அத்தனை வர்ணகளையும் திரை உள்ளபடி விளக்குகின்றது.அங்கணம் முக்குணங்களும் பரமாத்மாவிடத்தும் இல்லை. ஆயினும் குணங்களை எல்லாம் விளக்கவும் ரசிக்கவும் செய்கிறது அறிவு சொரூபமாகிய சிதாகாசம்.
ரூபியும் அரூபியுமான கடவுள் ஒன்றேதான்.ஒற்றை நம்பினால் இன்னொன்றையும் நம்பினதாகும்.எரியக்கூடிய சக்தியைத் தவிர்த்து நெருப்பையும்,நெருப்பைத்தவிர்த்து எரிகின்ற சக்தியையும் சிந்திக்க முடியாது.இன்னும் பாலையும் அதன் நிறத்தையும்,சூரியனையும் அதன் கிரணங்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.அது போல குணஸ்வரூபமான ஈஸ்வரைத் தவிர்த்து நிகுன ஸ்வரூபனையும்,நிர்குண ச்வரூபனைத்தவிர்த்து குனச்வரூபனையும் சிந்திக்க முடியாது. ஸ்ரீ.ராமகிருஷ்ணர் .

செவ்வாய், 12 மே, 2009

எச்.ஐ.வி எச்சரிக்கை

சில வாரங்களுக்கு முன் திரைப்படம் பார்க்கச் சென்ற ஒருவர் ,சீட்டில் உட்காரும் பொது எதோ ஊஸி போல குத்துவதை உணர்ந்து,எழுந்து பார்க்கும் போது ,சிருன்ச்சி ஒரு குறிப்புடன் காணப் பட்டது.அதில் "இப்போது நீங்களும் HIV ஆல் பதிக்கப் பட்டுள்ளீர்கள் "என எழுதப் பட்டிருந்தது.

Disease Control Center (in Paris ) இன் சமீபத்திய ஆராய்ச்சிபடி இது போன்ற சம்பவங்கள் தற்போது அடிக்கடி நடப்பதாகவும் ,ஊஸிகளில் HIV + இருந்ததாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாங்க்களில் நாமாக படிவங்க்களை எடுக்கும் இடங்கள் போன்ற இடங்களிலும் இந்த வகை ஊசிகள் காணப படுகின்றன.பொது இடங்களில் எங்கு அமர்ந்தாலும் அமரும் இடத்தை ஒரு முறை ஆராய்ந்து விட்டு அமரச் சொல்லுங்கள். குடும்பத்தாரிடம் ,குழந்தைகளிடம் இதைப் பற்றி கண்டிப்பாக சொல்லவும்.

சமீபத்தில் டெல்லியில் திரைப்படம் பார்க்க தனது வருங்கால கணவருடன் சென்றாள் ஒரு இளம் பெண் .வேகமாக அருகில் வந்த ஒருவன் ஊஸியை அவள் கையில் சொருகி விட்டு,எயிட்ஸ் உலகிற்கு உங்களை வரவேற்கிறோம் என்ற இரு குறிப்பையும் விட்டுச் சென்றுள்ளான்.

சாதரணமாக ஆறு மாதங்களில் இருந்து கிருமி வேலை செய்ய ஆரம்பிக்கும்.ஆரோகியமான உடம்பு என்றால் ஐந்து முதல் ஆறு வருடங்கள் ஆகலாம்.இந்தப் பெண் நான்கு மாதத்தில் இறந்து விட்டாள்.எனவே எங்கேயும் கவனமாக இருங்கள்.

With Regards, Arvind Khamitkar ,
I.A.S, Director of Medical & Research Div, Chennai.




சனி, 9 மே, 2009

எழுத்தாளர்களின் கனிவான கவனத்திற்கு..



ஆர்.கே.நாராயண் என அறியப்பட்ட ராசிபுரம் கிருஷ்ணசாமி அய்யர்
நாராயணசாமி .சென்னையில் கண்டிப்பான உள்ளூர் தலைமை ஆசிரியருக்கு, மகனாக பிறந்தார்.(10-10-1906).ஆர்.கே.லட்சுமணன் ,பிரபல கார்டூனிஸ்ட் இவரின் இளைய சகோதரர்.

வேதியலும் ,பௌதீகமும் பிடிக்காமல் ஆங்கிலம் அதிகமாக ஈர்க்க,படிப்பை மிகவும் கடினமாகவே கடக்க வேண்டி இருந்தது.சிறிய வயதிலேயே ஆங்கில இலக்கியங்கள்.தான் . மிகவும் ஆர்வமாக படித்தார்.தனது நண்பர்களுக்கு தேனிரும் ,சிற்றுண்டியும் கொடுத்து தனது படைப்புகளை அறிமுகப் படுத்தினார்.நல்ல அறிவான படைப்பு என பாராட்டும் பெற்றார்.ஆனால் அவரின் தந்தையின் நம்பிக்கை அவருக்கு சாதகமாக இல்லை.அவரின் துண்டுதலால் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

முதுநிலை படிப்பிற்கு விண்ணப்ப படிவம் எடுத்துக்கொண்டு மாடிப்படியில் ஏறும் போது, எதிரே வந்த நண்பர் M.A. படிப்பதில் உள்ள கடினத்தன்மை பற்றி கூற ,அந்த முயற்சியை அத்துடன் விட்டொழித்தார்.

வாழ்க்கைக்காக படைக்கும் முயற்சியில் இறங்கலானார்.சில கவிதைகள்

பிரசுரமும்
ஆகின.அவரின் முதல் புத்தகம் "Development of Maritime Laws of 17th-Century England”.என்பது.அது பற்றிக் குறிப்பிடும் போது"கவர்ச்சியே இல்லாத புத்தகம்.என்னுடைய படைப்பு முதன் முதலில் அச்சேறுவதில் உள்ள சுகத்தை அறிந்தேன்"என்கிறார்.அது ஒன்றுதான் மிச்சம்.

அதன் பின்னர் வாழ்க்கை நடத்த ஆசிரியர் பணியில் சேர்ந்து இரண்டே நாளில்
வேலையே
உதறினார்.

1930-ல்தனது முதல் நாவலான சுவாமியும் அவனது நண்பர்களும் என்ற கதையை எழுதினார்.அவரின் கற்ப்பனை உலகம் சிறகை விரித்து பறக்க ஆரம்பித்தது.அவரின் பார்வையில் அந்த அழகான உலகம்.ஆல்பிரட் மிஷன் ஸ்கூல்,சரயு நதி,மார்க்கெட் ரயில்வே ஸ்டேஷன் என அழகான மால்குடி கிராமமாக விரிகிறது.புவியியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளாக அந்த கிராமம் என்றும் கண்களில் நிற்கும்.

ஒளியியல் படைப்புகள்,கண்களின் வழியே ஊடுருவி,மனதில் நிற்ப்பது என்பது வேறு.நினைவிலேயே உருவாக்கி நம் கற்ப்பனையில் நிலை நிறுத்துவதில், எழுத்தாளனின் சாதனை வெளிவருகிறது.

கண்ணின் முன்னால் அந்த கிராமத்தைக் கண்ணுக்குள் கொண்டு வந்து,இன்றும் நிலை நிறுத்தியாதுதான் சாதனை.அவரை அறிய வேண்டியது ஒவ்வொரு வளரும் எழுத்தாளரின் கடமை.

அதைப் பதிப்பிற்கு அனுப்பிய இடத்தில் எல்லாம் ,சுவற்றில் இட்ட பந்தாக திரும்பி வர, மனம் நொந்து போனார்.இறுதியாக லண்டனில் உள்ள நண்பருக்கு அதை அனுப்பி,பின்குறிப்பாக பதிப்பிக்க முடியவில்லை என்றால்,கைப் பிரதியை கல்லில் கட்டி தேம்ஸ் நதியில் வீசிவிடுமாறு எழுதி

இருந்தார்
.

அந்த நண்பர் அந்த பிரதியை கிரகாம் கிரீன் என்ற பதிப்பாளரிடம் கொடுக்க ,உடனே அவர் பதிப்பித்தார்.காலத்தால் அழியாத புகழைக் கொடுத்த அந்த புத்தகம் ஐந்து வருட போராட்டத்திற்கு பின் 1935 ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது.

கிரீன் உடன் ஆன நாராயண் அவர்களின் நட்பு அவர் இறந்த 1991 வரை தொடர்ந்தது.இத்தனைக்கும் அவர்கள் ஒரே ஒரு முறைதான் சந்தித்தனர்.1964 ஆம் ஆண்டு சந்தித்தனர்.நட்பின் இலக்கணம் இதுதான்.

நம்மை அடுத்துள்ள ஒரு நபரைப் போல அவரின் பாத்திரப் படைப்புகள்.அதே நேரத்தில் வித்தியாசமான பாத்திரங்கள்.அறிவு ஜீவித்தனத்தை காட்டாமல் அதே நேரத்தில் இலக்கிய தரம் வாய்ந்த கதா பாத்திரங்கள்.பெரும்பாலும் தென்னிந்திய சாயலில் ஆன முகங்கள் அவரின் அடையாளங்கள்.

மால்குடி ஒரு கற்ப்பணைப் படைப்பு, கனவில் வர்ணம் பூசப்பட்ட ஓவியம் மட்டும் அல்ல.பகல் கனவில் இருந்து ,லயமாய் வெளியே வரும் நிலையில் உள்ள ஒரு விஷயம்.அதில் வரும் பாத்திரப் படைப்புகள் பணமும் புகழும் மட்டும் எதிர்கொண்டு வாழாமல் ,தன் நினைவின் பதிவுகளை எவ்வளவு நாள் பதிக்கிறார்கள் எனக் காட்டுவது அதன் சிறப்பம்சம்.இன்றைய காலகட்டத்திற்கும் அவரின் பாத்திரப் படைப்புகள் ஒத்து வருவது அழகு.

அவரின் நடையில் எளிமையும் ,தன்மையும் என்றும் நிலைத்திருக்கும்.பாரம்பரியத்தின் அழகும்,கிராமிய மனம் நிறைந்த கதைகளுடே செல்லும்நேர்த்தியும் ,மெல்லிய நகைச்சுவையோடு கூடிய லயமும் எங்கு கிடைக்கும்.

சாகித்திய அகாடமி,பத்ம பூஷன் போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.நோபல் பரிசுக்கு தகுதிப் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய சோகமும் நடந்தது.

ஐரோப்பிய மொழிகள், ஹீப்ரு உள்பட அனைத்திலும் இவரின் கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.அவரின் ரசிகர்களாக சோமர்செட் மோகம்,கிரகாம் கிரீன் போன்றோரைப் பெற்றவர்.லீலாவின் நண்பர்கள்


என்கிற
சிறுகதை லண்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு பாடத் திட்டமாக உள்ளது.

கண்டிப்பாக
அறிந்து கொள்ள வேண்டிய நபர்களில் ஆர்.கே. நாராயண்

முக்கியமானவர்
ஆவார்.


செவ்வாய், 5 மே, 2009

ஒபாமா என்கிற ஒரு ஜாதியத் தலைவர்


பல வருடங்களுக்கு முன் மிகப் பிரபலமான ஒரு தலைவர்.எளிமைக்கும் தேசியத்திற்கும் பேர் போன ஒரு தலைவர்.அப்படி ஒரு தலைமைதான் தங்களின் எதிர்கால லட்சியம் என கொக்கரிக்கும் கட்சிகளும் ஏராளம்.அப்படிப்பட்ட ஒரு தலைவரின் ஜாதியம் எப்படி பட்டது என்று பார்த்தால்தான் ராஜதந்திரம் என்பதும்,தற்போது ஒபாமா கடை பரப்பும் பொருளாதார பல் நோக்கு சரிப் படுத்தல்களும் புரிய வரும்.

சாதாரண கூலிகளாய் வேலைப் பார்த்த அந்த இனத்தவரில் சிலருக்கு நினைவில் வைக்க முடியாத அளவிற்கு நிலங்கள்.(விலை போட்டு வாங்கி இருந்தால்தானே நினைவில் இருக்கும்).சாதியக் கட்டுப்பாடு மற்றும் கீழ் நிலையில் உள்ள தன் ஜாதிக்காரனைத் தூக்கிவிட வேண்டும் என்கிற புரிந்துணர்வு அடிப்படையில் ,அவருக்கு வேண்டிய நம்பிக்கைக்கு பாத்திரமான சிலருக்கு புறமபோக்கு நிலங்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு அளிக்கப் பட்டன.திடீர்ப் பணக்காரர்கள் உதயம்.

அந்த ஜாதிக்காரர்கள் சொன்னால் ஒழிய இந்த விஷயங்கள் வெளியே வராது.மக்கள் தொடர்புச் சாதனங்கள் அதிகம் இல்லாத காலகட்டங்களில் இவை பற்றி யாரும் நினைக்கவே முயவில்லை."அவனுக்கு புதையல் கிடைத்தது,லாட்டரி அடித்தது,கள்ளப் பணம் கிடைத்தது"போன்ற கதைகளை நம் முன்னோர் கூறுவது இப்படித்தான்.

படிப்பறிவற்ற(இப்போது அல்ல)தன்னுடைய சமூகத்திற்காக அவர் போட்ட சட்டங்களில் ,எல்லோருக்கும் பயன் கிடைத்தது.மிகக் குறைந்த அளவு படிப்பே ..பாடம் கற்பபிக்க போதும் என சொல்லி, அவரின் ஜாதியைச சார்ந்த பெரும் பாலான பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்தவர்,அத் தலைவர்.

பைபிளில் ஒரு வாசகம் வாரும்"எஜமானனின் மேஜையில் இருந்து விழும் ரொடடித் துண்டுகள் , நாய்களின் பசியைப் போக்கும் "என்று .நெல்லுக்கு பாய்ந்தது சிறிது புல்லுக்கும் பாய்ந்து இன்றுவரை அவரின் புகழ் பாடிக் கொண்டு இருக்கிறது.

அவரின் மாவட்டத்திற்கு போனவர்களுக்கு ,பல கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு தண்ணீர் கொண்டு வருவதற்க்காக அந்த காலத்திலேயே போடப் பட்ட குழாய்கள்,மிகவும் பிரமிப்பாக இருக்கும்.வீராணம்,புதிய வீராணம் என இப்போது ஆகும் செலவுகளுக்கு,அப்போதே எந்த வித அலட்டலும் இல்லாமல் காரியத்தை முடித்து விட்டார்.

அப்படி நம் ஜாதியை தூக்கி நிறுத்த ஒருவன் வரமாட்டனா என அனைவருக்கும் ஒரு எதிர் பார்ப்பு உலகின் அணைத்து இனத்திற்கும் உண்டு.அந்த எதிர்பார்ப்பின் பலன்தான் ஒபாமா.
சமீபத்தில் ஒரு வேண்டுகோளை அவர் வெளியிட்டார்.எதிர்காலத்தில் நாம்முடைய கைகளை நாமே நம்ப வேண்டும்.அதனால் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்.

இன்று ஒரு அறிவிப்பு.இந்தியா,சைனா,பிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் , முதலீடு செய்தால் வரி விலக்கு இல்லை.பெங்களூரில் ஆரம்பிப்பதை,நியுயார்க்கில் ஆரம்பித்தால் வரி விலக்கு உண்டு என்கிற ரீதியில் போகிறது .

இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?அமெரிக்கர்கள் கடின உழைப்பாளிகள் இல்லை.தனி மனித சுதந்திரம் என்று,தங்களின் சொந்த குழந்தைகளை கூட பள்ளிக்கு அனுப்ப கண்டிக்காத மன நிலையில் உள்ளவர்கள்.அவர்கள் எட்டு மணி நேரத்திற்கும் மேல் சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பது,உடலை வருத்தி வேலை பார்ப்பது எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இப்போது அங்கே முன்னேற வேண்டும் என்கிற நிலையில் இருக்கும் , துடிக்கும் நிலையில் யார் இருக்கிறார்களோ,அவர்கள் கண்டிப்பாகபடிப்பார்கள்.உள்நாட்டில் உருவாகும் வேலைகளுக்கு ஆள் இல்லாமல்தானே இங்கே வந்து ஆள் எடுக்கிறார்கள்.சட்டங்கள் மற்றும் வரி மாற்றங்களினால் ,அங்கு உருவாக்கப் படும் நிறுவனங்களுக்கு ,வேறு வழி இல்லாமல் அங்கே உள்ளவர்களைத்தான் பயன் படுத்த வேண்டி வரும்.

ஒபாமாநினைத்ததுநடக்கும்.நல்லபெயருடன்."எஜமானனின்................"மற்றவர்களுக்கும் சிறிது ஈயப்படும்.எல்லாம் புரிவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.நல்லவை நடந்தால் எப்படியானாலும் வரவேற்க வேண்டியதுதான்.

திங்கள், 4 மே, 2009

ZOOZOOS ..........


உண்மையில் கார்டூன் animated அல்லாத ஒரு விஷயம்.இந்தியாவில் அணைவரின் கவனத்தையும் ஈர்த்த vodafone விளம்பரத்தில் வரும் பொம்மைகளுக்குதான் இந்த பெயர்.உண்மையில் அவை அனைத்தும் மனிதர்கள்தான்.
ஐபிஎல் க்கு இடையில், எவ்வளவு எரிச்சலான நேரத்தில் இந்த் விளம்பரம் வந்தாலும் சந்தோஷத்தைக் கொடுப்பதில் இவை தவறவில்லை.
மொத்தம் உள்ள 30 விளம்பரங்களில் 15 போடப்பட்டதாகவும், மீதமுள்ளவை இன்னும் உள்ள ஐ.பி.எல்.போட்டிகளின் போது வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதை தயாரித்தது ogivy அண்ட் mather (Q&M)இந்தியா நிறுவனம் ஆகும்.கடந்த வாரத்தில் மட்டும் 15,000 பேர் you tube-ல் பார்த்ததாக சொல்கிறார்கள்.
மண் மோகன்,அத்வானிக்கு இணையாக zoozoo-வும் பிரபலமடைந்து விட்டது.
ஒரு நாளுக்கு குறைந்தது 300 நிமிடங்கள் விளம்பரம் வருகின்றது.கடைசியாக வரும் விளம்பரத்திற்கு எதிர்ப் பார்ப்பை அதிகப் படுத்துவதுதான் இதன் நோக்கமே.
ஆறு மாதமாக யோசித்து ஒரு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பும் நடந்து முடிந்து இருக்கிறது.
ஒவ்வொரு விளம்பரமும் 15 முதல 20 விநாடிகள் வருமாறு அமைக்கப் பட்டுள்ளது.
நடிப்பவர்கள் அனைவரும் உள்ளூர் நடிகர்கள்.மிகப் பெரிய முட்டை வடிவிலான தலைக் கவசம்,உடைகள்,பொதுவாகவே கண்கள் தெரிய வாய்ப்பு இல்லாமலே நடிக்க வேண்டி உள்ளது.மூச்சு விடுவதும் சிரமமாக, அவ்வப்போது தலைக் கவசத்தை கழற்றி மூச்சு விட்டு.....அப்பா...!
முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனிமேஷன் பயன்படுத்தப் பட்டுள்ளது. குழந்தைகள் பயன் படுத்தப் படவில்லை.
காலங்களைக் கடந்து நிற்கும் சில விளம்பரப் அடங்களில் zoozoo வுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.

ஞாயிறு, 3 மே, 2009

10 Things Men Don't

Share with women..........
1.Men never admit to the number of beers they've had.The girl friend gets an inflated figure,the wife,a conservative estimate.
2.Women clutch a man's hand.Shudder and close thei eyes when they watch a horror movie.A man will never admit to wanting to do the same.
3.Men never walk on a treadmill.They only jog.
4.The cell phone is carefully guaded.Because guioty or not,woman don't belive there could be an innocent wxplanation behind a call or an sms.
5.Bringing office problems home are a strict no-no.Menlike to belive they can sort out problems on their own.
6.woman alone are brand conscious.No self-respecting man will admit to caring about what lable he sport.
7.A man may see jwellery or a dress that could look good on a woman,but never admit to noicing it.It would go against his idea cool.
8.Reaching the airport an hour early is not something a man would like to advertise.He will always 'just about make it in time'.
9.It's easy to win brownie points with a woman while claiming to be on an empty stomach.Admitting to having eaten a decent meal just does't win the same responce.
10.Only women go ga-ga over Shah Rukh Khan.Men can respectably only like Amir Khan - and only intellectually ofcourse.

FEEL FRESH

சனி, 2 மே, 2009

வேதங்கள் ...


உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.
எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது.
"புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்"என்பது விவேகானந்தரின் எண்ணம்.
அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.
உபநிஷதங்கள், பிரம்மா சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீதை முஉன்றும் 'பிரஸ்தான த்ரயம்'என்று வழங்கப் படுகின்றன.
அறுதி உண்மைகளில் உபநிஷதங்களே சிகரத்தைத தொட்டதாக கருதுகின்றனர்.
உபநிஷங்கள் பலவானாலும்,108 பொதுவாக கொள்ளப் படுகின்றன. அவற்றில் ஈஸ,கேன,கட,பிரச்சன,முண்டக,மாண்டூக்ய, ஐதரேய,தைத்திரீய,சாந்தோக்ய ,பிருகதரன்யா , சுவேதஸ்வதார , கௌசீதகி , மகாநாராயண, மைத்ராயணி இவை பதினான்கும் முக்கியமானைவை.


உபநிஷதம் ஐதரேய, கௌசீதகி , வேதம் ரிக்

உபநிஷதம் ஈஸ,கட,தைத்திரீய,
பிருகதரான்யா, சுவேதஸ்வதார , வேதம் யஜுர்
மைத்ராயணி, மகாநாராயண.

உபநிஷதம் கேன,சாந்தோக்ய வேதம்சாம

உபநிஷதம் பிரச்சன,முண்டக,மாண்டூக்ய வேதம்அதர்வண

யஜூர் வேதத்தில் சுக்ல,கிருஷ்ணா என இரு பிரிவுகள் உண்டு.கிருஷ்ணா யஜுர் வேதத்தில் தைத்த்ரிய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் பற்றி கூறப் பட்டுள்ளது.சுடர் என்ற முனிவரால் அருளப் பட்டது.

வாழ்க்கை தத்துவங்களையும் , புரிதல்களையும் பிற மதங்களிலும் ,சமய புத்தகங்களையும் மேற்கோள்களையும் பார்க்கும் நாம் , நம் மதத்தின் பெருமைகளை தேடி நாடினால் , அதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இறப்புக்கு பின் என்ன நடக்கும்.....ஒரு ஆராய்ச்சி பூர்வமான அலசல் எமனுடன் இருந்தால்....இருந்தால் என்ன? இருக்கிறதே? அதுதான் கட உபநிஷதம்.

வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின் முலம் உண்மை புகட்டப் படுகின்றது.

நசிகேதன் என்கிற சிறுவன், வாஜசிரவசின் மகன்.தந்தையின் யாக நியதிகளை சரியாக கடை பிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை அவன் தந்தை விரும்பாததால் அவன் எம தர்மனிடம் செல்ல நேர்ந்தது. அவன் மூன்று வரங்களை கால தேவனிடம் பெற்றான்.அதைப் பற்றி கூறுவதுதான் இந்தக் கட உபநிஷதம்.

வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை படித்துப் பாருங்கள்.வாழ்வின் பார்வையும் சாவின் முழுமையும் புரியும். இன்னும் வளரும்.........................!