ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

செம்புலப்பெயல் நீர் போல...

இந்த சங்க இலக்கியப் பாடலை பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் பாடினால்...!

நமது பாடலின் விளக்கம், தலைவனும் தலைவியும் கண்டவுடன் காதல் கொண்டு தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இப்பாடல் உள்ளது.நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிகிலோம்.ஊரையும் தெரியாது. இருவரின் தந்தையர்களைப் பற்றியும் தெரியாது, ஆனாலும் நம் இருவரின் எண்ணங்களும் செம்மண்ணில் தண்ணீர் சேர்வது போல் இணைந்தனவே என பாடல் இருக்கும்.

பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் பாடல் ஒன்று ,"as long as you love me ".இந்த கருத்தை ஒட்டியே இருந்தது.

நீ யாரென்பது பற்றி எனக்கு கவலை இல்லை
எங்கிருந்து வருகிறாய் என தெரியவில்லை ...."as long as you love me "
என வரும் கேட்டுத்தான் பாருங்களேன்.