traffic analytics

சனி, 21 நவம்பர், 2009

Just for you......!

Savage Garden...


One love Blue


Nothing Gonna Change My Love For You


My Love

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மாரடைப்பு ....!தனக்கு தானே முதல் உதவி செய்து கொள்ள ......!

இது மாலை 6.15 தனியாக கரை ஓட்டிக்கொண்டு அன்றய கடினமான நிகழ்வுகளை நினைத்துக் கொண்டு அயர்ச்சியுடன் செல்லும்போது…சிக்னலில்





உடனடியாக இதயத்தின் ஆழத்தில் லேஸான வலி (severe pain) ஆரம்பித்து தோள்களில் கைகளில் பரவ ஆரம்பிக்கின்றது.....


மருத்துவமனை இன்னும் சற்று தொலைவில் நிழலாடுகின்றது.செல்ல முடியுமா என்கிற எண்ணம்.....File:AMI pain front.png




என்ன செய்யலாம்???


மாரடைப்புக்கான CPR பயிற்சியை நீங்கள் பெற்ற போது அந்த பாழாய்ப் போன பயிற்சியாளர் தனக்கு தானே எப்படி செய்வது என்று சொல்லாமல் விட்டு விட்டாரே?!!!



என்ன செய்யலாம்???...


பயப்படாமல் தொடர்ந்து இருமிக்கொண்டே இருங்கள்.ஒவ்வொரு இருமலுக்கும் முன்னர் ஒரு ஆழமான நிலையில் மூச்சை இழுத்து விடவும்.இருமல் ஆழ்ந்து இருக்கட்டும்.ஆழ்ந்து நெஞ்சில் இருந்து கபத்தை வெளியேற்றும் வண்ணம் இருக்கட்டும்.

இந்த முயற்சியை உதவி கிடைக்கும் வரை இரண்டு நொடிகளுக்கு ஒரு முறை தொடர்ந்து செய்யவும். அல்லது இதயத்துடிப்பு ஓரளவிற்கு சரியாகும் வரை செய்யவும்.

மரணம் என்பது இதயம் நின்று விடுவதால் மட்டுமே நிகழ்ந்து விட்டதாக கருத முடியாது.இதயம் நின்ற பிறகு 40 நொடிகள் மூளை உயிருடன்தான் இருக்கும்.மூளை செயல் இழந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழுமையாக மரணம் அடைந்ததாக கருதப் படுவான்.இந்த 40 நொடிகளுக்குள் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டத்தை உருவாக்கினால் ,மூளை உடனே மரண மடையாது


இதயத்தை செயற்கையாக அழுத்திக் கொடுப்பதால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்தம் சரியாக செல்ல ஆரம்பிக்கும்.அதை செய்ய மருத்துவரோஅல்லது cpr பயிற்ச்சி பெற்ற ஒருவரோ இதயத்தை இயங்க வைக்க முயற்சி செய்யலாம்.

அவ்வாறு இல்லாத சூழலில் தானாகவே மேற்கண்ட பயிற்சியினை செய்யலாம்.
ஆழமாக மூச்சை இழுப்பதால் ,அதிகமான ஆக்ஸிஜன் நுரையீரலுக்கு செல்கின்றது.ஆழ்ந்த இருமல் ,இதயத்தை அழுத்துவதால் ஓரளவிற்கு இரத்த ஓட்டம் மூளைக்கு செல்கின்றது. இருமலால் இதயத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சரியான இதய துடிப்பு மீண்டு வர உதவி செய்யும்.

இந்தப் பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே ,அடுத்தவரின் உதவியை அல்லது மருத்துவமனையை உடனடியாக அணுகவும்.


திங்கள், 17 ஆகஸ்ட், 2009

கொஞ்சம் ரிலாக்ஸ்....!


மிகவும் கவர்ந்த பாடகி (பால்குனி பதக்)திரிஷாவை இப்படி பார்த்தது உண்டா?




மனதின் காதலுக்கு வயதில்லை.(ஜக்ஜித் சிங்க்) காதல ,கவிதை,பாடல் இணை பதிவு என எல்லாமே அழகு



ரகாத் பதெ அலிகானின் இசை என்னும் பிரவாகம்


இது எப்படி இருக்கு?உதித்






தாய் மண்ணுக்குசமர்ப்பணம்

புதன், 22 ஜூலை, 2009

மாதிரவேளூர்........மரியாதைக்குரிய பேரூர்... ....!Mathiravelur

செறிந்து அடர்ந்த மரங்கள்,திகட்டாத பசுமையின் பரவலாய் வயல்கள்,கொள்ளிடத்தின் கரையில் ஒய்யாரமான பாதையில் சிதம்பரத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் துரத்தில் உள்ள கிராமம்தான் மாதிரவேளூர் என்னும் அழகிய கிராமம்.ஏறக்குறைய 10000 அளவு மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஜீவாதாரங்களில் ஒன்றான சிறு கிராமம்.


Mathiravelur
உடனே பாரதிராஜா என யோசிக்காதீர்கள்.அதைவிட அழகான எளிமையான கட்டுக்கோப்பான கிராமம்.சிதம்பரத்தில் இருந்து கொள்ளிடத்தின் நீண்ட பாலத்தைக் கடக்கும் போதே ம்னம் எதோ ஒரு மோன நிலையில்போகின்றது.

மாதலீஸ்வரர்ர கோவில் இங்கு இருப்பதனால் இவ்வூருக்கு இப் பெயர் ஏற்ப்பட்டது.மேலே உள்ளதுதான் அக கோவில்.ஊரின் பாரம் பரியத்தை நினைவூட்டுகின்றது.மாதிரவேளூர் சுற்றி உள்ள ஊர்கள் கீரன்குடி பூங்குடி , பாலூரான் படுகை , பட்டியமேடு போன்றவையும் அடங்கும்.

பல் நூறு வரடங்களுக்கு முன் ,பொற்கால ஆட்சிக்கு உட்பட்ட பூமி, கலையும்,கவிகளும் வாழ்ந்து தழைத்த பூமி என்கிற எண்ணம் மேலோங்குகின்றது.இப்போதும் வாய் பிளந்து வியக்கும் வண்ணம் கல்லணைக் கட்டியவனின் எண்ணம் இனியதாய் மனதில் விரிகின்றது.

நீர் இல்லை என்றாலும் கொள்ளிடம் அழகுதான்.அன்னை எப்போதும் அழகுதானே...!



கொள்ளிடம் பாலத்தைத் தாண்டி வலது புறமாக திரும்பினால்,கை விடப்பட்ட குழந்தையாக சாலை. சிறிது தூரம் வண்டியின் குலுங்கல் நம்மை சீர்த்தூக்கிப் பார்க்க நல்ல தார் சாலையில் நுழைகின்றோம்.மழைக் காலம் இல்லை . ஆற்றுத் தடம் இனிதாக இடது புறமாக வளைந்து நெளிந்து நம்மை உள்ளே அழைக்க ஆயத்தமாகின்றது.

கேரளா போல் இல்லாமல் திகட்டாத பசுமை ,மெல்லிய தென்றல் என ஏறக் குறைய சொர்க்கம் கண்ணில் தெரிகின்றது.கடலின் அருகாமையைக்கூட நாம் உணர்வாதாக அக் காற்று காதோடு சொல்கின்றது. கொள்ளிடத்தின் உயர்த்தப் பட்ட கரையில் ,கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட அக் கரையின் மீது போடப்பட்ட பாதை இக்கால பொறிரியாளர்களை "வா ஒரு கைப்பார்க்கலாம் " என வம்புக்கு இழுத்தது.

இரு புறமும் அடர்ந்த மரங்கள்.கொள்ளிடத்தின் செழுமையை பறை சாற்றியது . அப்பழுக்கில்லாத கிராம குழந்தைகளின் ,சிரிப்பும் பெண்களின் நடை உடை பாவனைகள் ,ஆற்றின் அக்கரையில் உள்ள கிராமங்களை இணைக்கும் சிறு பாலங்கள் என கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே செல்ல செல்ல மனம் எங்கோ செல்கின்றது....!

மூங்கில் பாலங்கள், தென்னை மரத்தை இணைத்து செய்த பாலங்கள்,ஒருவர் மட்டும் நடக்கக் கூடியது போல் கட்டப் பட்ட ,ஆங்கிலேயர் காலத்துப் பாலங்கள் என ஒரு பாரம்பரிய லயிப்பை காணலாம்.

மணலை எடுத்துக் கொண்டு வித்தியாசமான ட்ராக்டர்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. எப்போதாவது நம்மைக் கடக்கும் இரு சக்கர வாகனங்கள் என போகும் வழியில்,ரோட்டின் மேலேயே பெரிய அழகிய கோபுரத்துடன் ஒருகோவில் ,ஊரின் சிறப்பை கூறுகின்றது.குடவரசி அம்மன் கோயில் .ஊர் பேர் கீரன்குடி .

மெல்ல இடது புறமாக ஒரு சிறு பாலத்தைக் கடந்து ஊருக்குள் நுழைய எதிர்ப்படும் மனிதர்களிடம் நாம் யார் என அறிந்து கொள்ளும் தவிப்பு தனியாக தெரிய,திரு.ராம கிருஷ்ணன் அவர்களின் வீடு எது என யாரிடம் கேட்டலும்,அதை ஒரு கௌரவமாக எடுத்துக் கொண்டு பதில் சொல்லும் தோரணை ....ரசிக்க வேண்டிய ஒன்றுதான்.

'அக்ரகாரதுக்குள்ள கடைசி வீடு"

'நேரா போனிங்கன்னா...இடது கைப் பக்கம் கடைசி வீடு'

'இந்த ஊருக்குள்ளயே பெரிய வீடு'

'பெருய மச்சு வீடு'

என ஏகப் பட்ட அறிமுகங்களுடன் வீட்டை கண்டு பிடித்து போனோம் .

பெரிய வீடுதான்.




யாரையும் காணவில்லை.மெதுவாக அழைத்தால் உள்ளே இருந்து பயங்கர குழப்பத்துடன் வந்த ஒரு முகம் ,யாரென விசாரித்து விட்டு ,உட்காருங்கள் என் சொல்லிவிட்டு காணாமல் போனது.

போன சமயம் மணி சுமார் நன்பகல் 12 இருக்கும்.அன்றைய தினமலரை அப்போதுதான் கொண்டு வந்து போட்டு விட்டு போனார்கள். எடுத்துப் புரட்டும் போது,கால் அரவம் கேட்டு நிமிர்ந்தால் யாரோ இருவர்,

"ஐயா ...இருக்காங்களா?"எனக் கேட்க ,"தெரியவில்லை...!"என சொல்லவும்,

"நீங்க யாரு?" என விசாரிப்புப் படலம் ஆரம்பித்தது.

"இங்க ஐயாதான் தொடர்ந்து ஐந்து முறை பிரசிடென்ட்டு....அதாவது 25 வருடங்கள்...இப்பதான் இதை தனி ன்னு ஆக்கிட்டதால ஐயாவால நிக்க முடியல...!"எனக் கவலையுடன் அவர்கள் சொல்ல சற்று ஆவல் கூடியது.அவர் எப்படி இருப்பார் என எதிர் பார்ப்பு மேலோங்கியது.

உள்ளே இருந்து வெளியே எட்டிப் பார்த்த முகம் திரும்ப வந்து "ஐயா வயலுக்கு போய் இருக்காங்க .இப்ப வந்திடுவாங்க.."என சொல்லிவிட்டு காணாமல் போனது.வேலைக்காரப் பெண் தோற்றத்தில் இருந்த ஒரு பெண் எட்டிப் பார்த்து என்ன பேசுவது என தெரியாமல் அசட்டுச் சிரிப்புடன் ,தண்ணீர் வேண்டுமா எனக் கூட கேட்காமல் உள்ளே சென்றது அந்த வீட்டில் உரிமைப் பட்ட பெண் இல்லாத சூழ்நிலையை வெளிபடுத்தியது..

வந்தவர்கள் தொடர்ந்தார்கள்,"எங்கே தங்கி இருக்கிங்க?"

"சிதம்பரத்தில்தான்"

"அங்க ஐயாவின் சம்பந்தக்காரவங்க லாட்ஜ் இருக்கே அங்க தங்கலியா?"

அவர்கள் கிளம்பவும் ,மெதுவாக வயல் வெளிகளைப் பார்க்கலாம் என மெதுவாக நடையைத் தொடர்ந்தேன்.வீட்டை ஒட்டி பின்னால்,ஓடாமல் பூட்டிய ஒரு அரிசி ஆலை பழைய கம்பீரத்தை நினைவூட்டியது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை வயல்கள்,நான்கு மோட்டார்கள் ஓடிக் கொண்டு இருந்தன.

பெண்கள் துவைத்துக் கொண்டிருந்தார்கள்.குளித்துக் கொண்டும் இருந்தார்கள்.காமிராவைக் கவனித்துக் கொண்டே அவர்களை நெருங்க,

"எங்க வந்திருக்கிங்க?"கொஞ்சம் கூட கள்ளமில்லாத விசாரிப்பு....

"பிரசிடென்ட் வீட்டுக்குத்தான்..."

"யாருமே இல்லையே..நேத்துதான் அவங்க பொண்ணு போச்சு..இது எல்லாம் ஐய்யவோடதுதான்.சுமார் அறுவது ஏக்கர் "என கேட்காமலே டேட்டாக்கள் குவிந்தன.

"அதோ அந்த செங்கல் காளவாசலும் ஐயாவோடதுதான்.."முழுக்க முழுக்க விவசாயக் குடும்பமோ என எண்ண முழுவதும் தவறு என்றது அடுத்துக் கிடைத்த சேதிகள்.




மாடு ஒன்றை ஓட்டிக் கொண்டு வந்த முதியவரும் மற்றவர்களைப் போலவே முன்னுரை எழுதி விட்டு முடிவுரையும் தந்தார்.

"அம்மா...அய்யாவுக்கு 10 வயசுல அவரோட அப்பா இறந்துட்டாரு.ஐயாதான் மூத்தவரு.இது எல்லாமே சொந்த உழைப்பு தாயி!மூணு பசங்க...மூணு பொண்ணுங்க...மூத்தவரு பெரிய எஞ்சினியர் .E.B.ல இருக்காரு.ஸீர்காழி சிதம்பரம்ல அவர் தான் பெரிய ஆபீஸராம் .அடுத்தவர் வக்கீல் இப்போ எதோ வெளி நாட்டுல இருக்காராம்...அப்புறம் பொண்ணுங்க.எல்லோரையும் படிச்சவங்களுதான் கட்டி கொடுத்திருக்காரு..கடைசி பையன்தான் இப்ப பார்த்திங்க இல்ல வீட்டில...அவனும் எதோ விவசாயம் படிச்சவராம்....!"

அந்த கிராமத்துக்கும் பிள்ளைகளை வளர்த்திருக்கும் சம்பந்தமே இல்லை என ஆச்சர்யப் பட்ட போது அந்த பெரியவர் தொடர்ந்தார்,

"அம்மா......மநோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் இது ஊர் காரராம்.பெயர் திரு.சபாபதி மோகன் .இந்த ஊரை பூர்விகமாக கொண்டு வெளி ஊரில் புலம் பெயர்ந்தவர்ககளில் நிறைய படித்தவர்கள்தான் ...இப்போ
டி . வி இல் நடிக்கும் இருவர் அண்ணன் தம்பிகள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.ஒருவர் பெயர் நெப்போலியன் ...
மற்றவர்
பெயர் தெரியவில்லை" என்றார்.

நெப்போலியன்


என்னை வரவேற்ற புதுமுகம் .போய் அதிக நேரம் ஆகி விட்டது என தேடிக் கொண்டு வர வீட்டை நோக்கி சென்றேன்.அப்போதும் அய்யா வரவில்லை.

மீண்டும் சிலர் தேடிக் கொண்டு வர அதே விசாரிப்புகள்.....மீண்டும் சில செய்திகள்."எங்க வீட்டு விஷேசம் எல்லாம் அய்யா இல்லாம இருக்காதுங்க.எந்த பஞ்சாயத்தும் ஐயா இல்லாம தீராதுங்க.தீவிர கம்யூநிஸ்ட்காரர்.பிள்ளைகளுக்கு கம்யூநிஸ்ட் தலைவர்கள் முன்னிலையில் தான் கல்யாணமே நடத்தினார்.ஆனாலும் அவரின் துணைவியார் கிறிஸ்துவத்தில் அதிக ஈடுபாடு கொண்ட போதும் அதைத் தடுக்கவில்லை "என அவரின் பெருந்தன்மைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள்.பார்க்கும் ஆவலைக் கூட்டிக் கொண்டே போனார்கள்.

அது ஒரு நீண்ட அக்ரகாரத்தின் கடைசி வீடு.அக்ரகாரத்தின் பெரும்பாலான வீடுகள் காலி செய்யப் பட்டிருந்தன.பிழைப்பு தேடி நிறைய பேர் வெளியேறியதாகச் சொன்னார்கள்.வாழ்வின் வெறுமை நிழலாடியாது.

கேரளாவில் 20 வருடத்திற்கு முன் ஒரு கிராமத்திற்குச் சென்று ,மீண்டும் அங்கே சென்றால் அடையாளமே தெரியாத அளவிற்கு உருக்குலைந்து போய் இருக்கும் என்பார்கள்.பிழைப்பு இல்லாமையால் இன் நிலைமை.இது தமிழ் நாட்டிலும் என எண்ணும் போது மனது வலிக்கத்தான் செய்கின்றது.

பொங்கலுக்கு அணைவரும் கூடுவார்கள் என்பது ஆறுதலாக இருந்தது.வாசலில் இருந்த கம்பி கதவில் சாய்ந்து கொண்டு இருந்த போது 75 வயது மதிக்கத்தக்க ஒருவர் சைக்கிளில் வந்து வீட்டின் முன்னால் நிறுத்தி இறங்க,சுதாரித்துக் கொண்டேன்.கதவைத் திறந்து விடவும் சைக்கிளை உள்ளே ஏற்றி நிறுத்தியவர்,யார் எனக் கேட்டு விசாரித்து விட்டு ,

"உள்ள வாம்மா "எனக் கூறிக் கொண்டு வேகமாக உள்ளே சென்றவர் பாயை எடுத்து போட்டு உட்காரச் சொல்லி விட்டு ,வேலைக்காரப் பெண்ணிடம் ,

"தண்ணீர் கொடுத்தாயா? "எனக் கேட்டு விட்டு பரபரப்பாக என்னைக் கவனிக்க எத்தனித்தார்.

இயல்பான பேச்சுக்கள்.அவரின் பிள்ளைகளைப் பற்றி மிகச் சாதரணமாக...சொன்னார்.

"என் பிள்ளை போன வாரம் தடுக்கி விழுந்தானக்கும் " எனப் பெருமை பேசும் உலகில்........ யதார்த்தம் மிக அழகாய் இருந்தது.

ஒரு வார்த்தை கூட தன் நிலங்களைப் பற்றியோ....சாதனைகள் பற்றியோ ஒரு வார்த்தை.......

சாதாரண குடியிருப்போர் சங்கத்தலைவர்கள் எல்லாம் விசிடிங் கார்டு அடித்து அலட்டிக் கொள்ள.....25 வருடங்கள் பிரசிடன்ட்டாய் இருந்தது பற்றி ஒரு வார்த்தை.....

ஆம் .மேன் மக்கள் மேன் மக்கள்தான்.





திரு.ராமகிருஷ்ணன் அவர்கள்

அவரைக் காணக் கிடைத்ததை ஒரு பெரும் பேராகத்தான் நினைக்கிறேன்.திரும்பவும் அவர் வயலுக்கு செல்ல ,நானும் அவரைத் தொடர்ந்தேன்.ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தார்.என்னால் அவர் பின் ஓடத்தான் முடிந்தது.அவரின் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.பை-பாஸ் சர்ஜரி செய்தவர் அவர் என்கிறார்கள்.ஸைக்கிளில் மட்டுமே சுற்றி வருகிறார்.கிராமத்தைத் தவிர வேறு எங்கும் தங்குவது இல்லை.

பிள்ளைகள் எவ்வளவு வருந்தி அழைத்தாலும் ,அங்கே தங்காமல் இங்கேயே இருக்கிறார்.அம்மா கடந்த வருடம் தவறி விட்டார்கள்.அந்த வெறுமை புதிதாகச் சென்ற எனக்கே தெரிந்த போது அவரின் நிலைமை சொல்ல வார்த்தைகள் இல்லை.

மத்திய உணவை முடித்துக் கொண்டு கிளம்பும் போது காலில் விழுந்தேன்.அவர் சொன்னார்"ஏம்மா ....நீ வேற ....நானே செய்த பாவத்தை எங்கே தொலைப்பது என தெரியாமல் இருக்கிறேன்...."என்ற போது ,கண்டிப்பாக எங்கள் இரு வ ரின் கண்களும் பனித்திருந்தன.

ஒரு மணி நேரம் மட்டுமே ஏற்ப்பட்ட அந்த உறவு எப்போதும் மனதை விட்டு நீங்காது.எப்படி வாழ வேண்டும்,பேச வேண்டும்.....நிறைய ....நிறைய கற்றுக் கொண்டேன்....

திரும்பவும் அதே பாதை.ஆனால் மனது வலித்துக் கொண்டே இருந்தது.


எந்தப்புரம் சென்றாலும் பின்னொக்கிச் செல்லும் மரங்கள் போல மனமும் பின்னோக்கியே சென்றது.எத்தனை கிராமங்கள் நம் என்.எத்தனை எத்தனை மனிதர்கள் இவரைப் போல..என் தாய் மண்ணுக்கு எப்போதும் பெருமைதான் அதன் மண்ணின் மைந்தர்களால்தான் .....!

ஞாயிறு, 5 ஜூலை, 2009

காட்டு மனிதர்களின் கூடாரம்... டென்மார்க்

இது ஒரு பாரம்பரிய விழாவாம்..!தனது ஆண்மையை நிரூபிக்க...டென்மார்க்கில் காலகாலமாய் நடை பெற்று வருகிறதாம்.கரை ஓரம் வரும் மனிதர்களை தனது நண்பனாக எண்ணி வரும் டால்பின்களைக் கொன்று.....அதுவும் கொடூரமாக....மனிதனை போல ஒரு மிருகம் வேறு இல்லைதானே...!உங்களால் முடிந்த அளவு இதை மற்றவர்களிடம் கொண்டு செல்லுங்கள்.

அந்தக் காட்டு மனிதர்களிடம் இருந்து இனியாவது இவற்றைக் காப்பாற்றலாம்.இது வெற்றி முரசு கொட்டும் விஷயமல்ல...வெட்கப் பட வேண்டியது என எல்லோருக்கும் சொல்லுங்கள்....உலகம் முழுவதும் தெரிந்தாலாவது வெட்கப் படுகிறார்களா எனப் பார்ப்போம்....?























வெள்ளி, 3 ஜூலை, 2009

மகத்தான மனித பிரம்மாக்கள்.......


உலகின் மிகப் பெரிய ,தற்போதைக்கு மிகப் பெரிய நகரும் இயந்திரமாக இதைத் தான் கொண்டாடுகின்றார்கள்.ஜெர்மனியின் க்ருப்ப் (krupp) என்கின்ற நிறுவனத்தில் நிலக்கரி சுரங்கத்தின் வேலைகளுக்காக உருவாக்கப் பட்டது இது.எளிமையாக பொருட்களை இடமாற்றும் கருவியாக உருவாக்கி இருக்கிறார்கள்.






சிறப்பு அம்சங்கள்:-


311 அடி உயரமும் 705 அடி நீளமும் கொண்டது.

தோரயமாக 45,500 தன் எடை கொண்டது.

100 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டது.

வரைவு செய்யவும் கட்டுமானத்திற்கும் சுமார் 5 ஆண்டுகள் ஆயின.

அதனை இணைத்து உரு கொடுக்க மேலும் 5 ஆண்டுகள் ஆகின.

5 பேர் இயக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது.

70 அடி குறுக்களவு கொண்ட பல் சக்கரங்களில் ,20 பற்களும்,ஓவ்வொரு பல்லும் 530 சதுர அடி வெட்டும் தன்மை கொண்டது.

ஆறு அடி உயரமுள்ள மனிதன் தலை தட்டாமல் நிற்கும் அளவுக்கு பெரியது இதன் பல் சக்கரங்கள்.

12 அடி அகலமும் ,8' உயரமும் 46 அடி நீளமும் கொண்ட சங்கிலியால் நகர் கின்றது.முன்புறம் 8-ம் , பின் புறம் 4 -ஆக செயல் படுகின்றது.

அதிக பட்ச வீக்கம் 1 மைல் /3 மணிக்கு என செல்லுகிறது .


ஒரு நாளைக்கு 76.455 காண மீட்டர் அளவுள்ள நிலக்கரியை கையாள்கின்றது.

விண்ணில் போக்குவரத்து இப்படித்தானோ?

காற்று,தண்ணீர் மற்றும் உணவு என எதற்குமே அங்கு வழி இல்லை எனத் தெரிந்தும் இது குறித்த ஆராய்ச்சிகளும் கனவுகளும் என்றும் குறைவதில்லை.

ஒகியோ கொலம்பஸ்-இல் உள்ள பாக்ஸ்லே உயர் நிலைப் பள்ளியில் பயிலும் ரைனா ஹுவங் என்கிற மாணவி, நாசா நடத்திய லூனார் (நிலவு) குறித்த ஓவியக் கண்காட்சியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.




நாசா நடத்திய இப் போட்டியில் மொத்தம் 147 பேர் கலந்து கொண்டார்கள்.25 அமெரிக்க மாகாணங்கள்,பிரான்ஸ், போலந்து ,இந்தியா மற்றும் ருமேனிய போன்ற நாடுகளில் இருந்தும் கலந்து கொண்டார்கள்.12 பல்வேறு பிரிவுகளின் கீழ் ஓவியர்கள்,பொறியாளர்கள்,கல்வியாளர்கள் மற்றும் அறிவியலார்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டன.

படைப்பாளரின் எண்ணம்,படைப்பு மற்றும் எண்ண வெளிப்பாடு மற்றும் நடை பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளடக்கிய ஓவியங்களில் இது இரண்டாவதாக தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளது.

போக்குவரத்துக் காவலர் நிற்கும் இடம் மட்டும் தெரியவில்லை...!

புதன், 1 ஜூலை, 2009

Internet – Job at Microsoft - Tomato

A jobless man applied for the of "office boy" at Microsoft. The HR manager interviewed him then watched him cleaning the floor as a test. "You are employed." He said.” Give me your e-mail address and I'll send you the application to fill in, as well as date when you may start." The man replied "But I don't have a computer, neither an email." I'm sorry", said the HR manager,” If you don't have an email, that means you do not exist. And who doesn't exist, cannot have the job." The man left with no hope at all. He didn't know what to do, with only $10 in his pocket. He then decided to go to the supermarket and buy a 10Kg tomato crate. Then he sold the tomatoes in a door-to-door round. In less than two hours, he succeeded to double his capital. He repeated the Operation three times, and returned home with $60. The man realized that he can survive by this way, and started to go everyday earlier, and return late Thus, his money doubled or tripled every day. Shortly, he bought a cart, then a truck, then he had his own fleet of delivery vehicles. 5 years later, the man is one of the biggest food retailers in the US. He started to plan his family's future, and decided to have a life insurance. He called an insurance broker, and chose a protection plan. When the conversation was concluded, the broker asked him his email. The man replied, "I don't have an email". The broker answered curiously, "You don't have an email, and yet have succeeded, to build an empire. Can you imagine what you could have been if you had an email?" The man thought for a while and replied, " Yes, I'd be an office boy at Microsoft!" Moral of the story: M1 - Internet is not the solution to your life. M2 - If you don't have Internet, and work hard, you can be a millionaire. M3 - If you received this message by email, you are closer to being an office boy, than a millionaire. .........

திங்கள், 29 ஜூன், 2009

DIFFERENT PEOPLE PERSPECTIVE

A clergyman, a doctor and a business consultant were playing golf together one day and were waiting for a particularly slow group ahead. The business consultant exclaimed, "What's with these people? We've been waiting over half and hour! It's a complete disgrace." The doctor agreed, "They're hopeless, I've never seen such a rabble on a golf course." The clergyman spotted the approaching green keeper and asked him what was going on, "What's happening with that group ahead of us? They're surely too slow and useless to be playing, aren't they?" The green keeper replied, "Oh, yes, that's a group of blind fire-fighters. They lost their sight saving our clubhouse from a fire last year, so we always let them play for free anytime." The three golfers fell silent for a moment. The clergyman said, "Oh dear, that's so sad. I shall say some special prayers for them tonight." The doctor added, rather meekly, "That's a good thought. I'll get in touch with an ophthalmic surgeon friend of mine to see if there's anything that can be done for them." After pondering the situation for a few seconds, the business consultant turned to the green keeper and asked, "Why can't they play at night?"

சனி, 13 ஜூன், 2009

நோ அட்வைஸ் ...ஜஸ்ட் .....எ......மெசேஜ் ....

சார்லஸ் ட்ரவ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளின் படி ,இதய நோய் வருவதற்க்கான காரணிகளுள் சிகிரட்டிற்க்கும் பங்கு உண்டு என்பதுதான்.கடந்த 12-ம தேதி ,91 -வது மாநாட்டில் நேற்று வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி வெளியிட்ட விஷயங்கள்தான் இது.

என்டோகிரைன் சொசைட்டியின் 91-வது வருடாந்திரக் கூட்டம் வாஷிங்டனில் நடந்த சமயம் வெளி இடப்பட்ட முடிவுகள் இவை . சிகிரெட்டில் உள்ள நிக்கோடின் என்கிற நச்சுப்பொருள் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை -சாதரண நிலையில் இருந்து குறைக்கும் தன்மை கொண்டது.சர்க்கரை நோய் பதிக்காத மனிதர்களுக்கு கூட ,இன்சுலின் அளவைக் குறைக்கும் தன்மை இதற்க்கு உண்டு.இதய நோயின் தீவிரத்திற்கும் இன்சுலின் மற்றும் க்ளுகோசின் அளவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.



இப் பல்கலைக்கழகத்தின் முதன்மை எந்டொக்ரையாலஜிஸ்ட் திரு தியோதேர் ப்ரீட்மேன் , நிக்கொடினுக்கும் இதய நோய்களுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ளார்.கார்டியாவஸ்குலர் நோய்க்கு காரணமான உடல் மெலிந்து போவதற்கு நிக்கொடினும் ஒரு காரணம்தான்.

சோதனையில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக எலி ஒன்றுக்கு ,தினமும் இருவேளை நிக்கோடின் செலுத்தப்பட்டு சோதனை செய்து பார்த்ததில்,உடல் மெலிந்து சாப்பிடும் உணவின் அளவும் குறைத்து போனது.சாதரண நிலையில் இருக்கும் எலிகளை விட மிக மந்தமான செயல் பாடுகள் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இத்துடன் என்று இல்லாமல்,க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் சமன் பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் சாதரணமானவர்களுக்கு இருப்பதை விட ,க்ளுகோஸ்-ன் அளவு சிகிரெட் குடிப்பவர்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கும்.இந்த நிலைப் பாடு இதய நோயின் முதல் எதிரி.

பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் சிகிரெட் குடிப்பவர்கள்தான் என்கிறது இந்த ஆய்வு.பிற காரணிகளும் இதில் அடிப் படையாக இருப்பதால் இதனை மட்டுமே காரணமாக சொல்ல முடிவதில்லை.

ஆய்வுகளின் முடிவில் எலியின் உடம்பில் சர்க்கரை நோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தோன்றியதாகவும் சொல்லப்படுகின்றது.நிக்கொடினால் ஏற்ப்படும் பாதிப்புகளுக்கு போதுமான மருந்துகள் இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை என்பதே உண்மை.

கான்ஸரை விட இதய பதிப்புகளால் அமெரிக்காவில் இறப்பவர்கள் அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன.தொற்றில்ல நோய்கள் பட்டியலில் இதற்க்கு முதலிடம்தான்.ரத்தத்தில் வேகமாக கலந்து,மூளையை எட்ட அது எடுத்துக் கொள்ளும் காலம் வெறும் ஏழு நொடிகள்தான். ஒவ்வொரு சிகிரேட்டிலும் சராசரியாக 1mg நிக்கோடின் உள்ளது.

ஹெராயின் மற்றும் கொகைன் இரண்டிற்கும் சற்றும் குறைவில்லாத பாதிப்புகளை நிக்கோடின் ஏற்ப்படுத்தும். எந்த வகையில் புகையிலை எடுத்துக் கொண்டாலும் பாதிப்பு ஒன்றுதான்.

LD50 அளவுள்ள 50 MG/KG பெருச்சாளிகளுக்கும், 3mg/KG சுண்டெலிகளுக்கும் 40–60 mg (0.5-1.0 mg/kg) மனிதர்களுக்கும் உயிரை எடுக்க போதுமானது.

இன்னும் தகவல்கள் தெரிந்து கொள்ளுங்களேன்.சிகிரெட் குடிக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.

புதன், 10 ஜூன், 2009

மரியதைக்குறிய சில விஷயங்கள்....!

நம்மில் இருக்கும், மாற்ற வேண்டிய சில குணங்கள்..... எத்தனை? நீரைக் குறித்து நிறைய கருத்துக்கள்.அதைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை விதைக்க வேண்டிய நமது முன்னோர்கள்...!

ஆடி மாதத்தில் பழைய ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட வேண்டும் என்கிற கேவலமான ஒரு முறையினால் நாம் இழந்த பொக்கிஷங்கள் அதிகம். எவ்வளவோ இலக்கிய ஆதாரங்களை இழந்துள்ளோம்.

நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்கின்ற கேவலமான பழமொழி வேறு...!நமது ஊரோடு ஆறு நின்று போவதில்லை.ஆற்றை எந்த ஊரில்
மதிக்
கிறார்கள். அது ஆதாரம் எனத் தெரியாமல்.அல்லது புரியாமல்.

அனைத்துக் கழிவுகளையும் கொட்டும் இடமாக...!வைகைத் தண்ணி குடித்தேன்,காவேரித் தண்ணி குடித்தேன் .....பெருமையாக சொல்லும் எத்தனை பேர் அதன் நலனை யோசித்திருக்கிறோம்?துணி துவைப்பது முதல்,பல் துலக்கி துப்புவது ,வண்டிகளைக் கழுவுவது என சகலவிதமான அழுக்கு விஷயங்களுக்கும் உபயோகப் படுத்துவது ஆற்றைதான்.

அஸ்த்தியைக் கறைப்பது முதல் கடவுளை கறைப்பதுவரை....கொஞ்சம் கூட சிந்திக்க ஏன் மறந்தோம்? இன்றும் கூட சில கிராமங்களில் கழிவறைக் கட்டுவதை கேவலமாக நினைப்போர் இருக்கும் வரை என்ன செய்ய முடியும்?

எந்த ரோட்டில் நம்பி கால் வைக்க முடிகின்றது?ரயில் தண்டவாளத்தின் நிலை,கடவுளே......!மிகவும் கொடுமை.அதை பராமரிப்பது நம்மைப் போன்ற மனிதர்கள்தான்.அதை நாமும் சரி, நிர்வாகமும் சரி என்றுதான் சரி செய்வார்களோ?

ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் போது ,கழிவறையை உபயோகப் படுத்தக் கூடாது என்பது ஏன் என இன்னும் கூட நிறைய படித்த மேதாவிகளுக்கு கூட புரிவதில்லை?

சென்டிரல் ரயில் நிலையத்தில் மிகவும் கொடுமை.பயணிகளால் அல்ல.அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களால்தான் அசிங்கப் படுகின்றது.பூட்டாமல் இருக்கும் கழிவறைகளை அவர்கள் தான் பயன்படுத்தி நாறடிக்கிறார்கள்.

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் நிற்கும் ரயில்களின் கதவுகளை (எழும்பூர் போல) பூட்டினால் பெரும் சுகாதாரக் கேட்டினைத் தவிர்க்க முடியும்.லட்சக் கணக்கில் பயணிகள் வரும் இடத்தில் இதைப் பற்றி யாருமே யோசிக்காதது ஆச்சர்யமாக தான் இருக்கிறது?பெரும் வி..பி.க்கள் வரும் இடங்களில் இதுவும் ஓன்று....!

பீச் .....எவ்வளவு அழகான இடம்.அங்கும் கூட நம் மக்களின் வீர தீர பராக்கிரமத்தால் ,உட்கார கூட பயமாக இருக்கிறது.பஸ் ஸ்டாண்டின் நிலை அதை விட.எந்த தூணிலும் கை வைத்து விட முடியாது.தரையிலும் அப்படித்தான்.

கொஞ்சம் யோசனை செய்தால், அணைத்திற்க்கும் காரணம் நம் மக்கள்தான்.அழகாக ,சுத்தமாக ,பளபளப்பாக இருந்த கோயம்பேடு,மாட்டுத்தாவணி நிலைமை மிகவும் மோசம்.

இவ்வளவு வசதியாக நமக்காக , வசதி தருகிறார்களே...அதை பத்திரமாக பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் யாருக்குமே வருவதில்லையே...?ஏன் இப்படி?

இன்னும் எவ்வளவோ?இதற்க்கு தீர்வே இல்லையா?யார் இதை சரி பண்ண முடியும்?அடிமட்டம் முதல்,மேல் மட்டம் வரை, தன் தேவைத் தீர்ந்தால் போதும்,அடுத்தவனுக்கு இருக்கிறதா? இல்லையா? என யோசிக்காத மனோ பாவம்தான் அடிப்படைக் காரணம்.இதை மற்ற முயல்வது கடினம்தான்.ஆனாலும் கண்டிப்பாக மாற வேண்டிய விஷயம் ,மற்ற வேண்டிய விஷயம் இது ...!

அடிப்படை மக்களுடன் நேரடித் தொடர்புடைய ரசிகர் மன்றங்கள்,அரசியல் கட்சிகள் கொஞ்சம் முயன்றாலே போதும்.இவை அருவருப்பான விஷயங்கள் என புரிய வைத்தலே போதும்.காமெடியன்கள் மட்டும் சொல்லாமல்,கதா நாயகர்களும் எந்த வித எதிர்பார்ப்புமின்றி இந்த விஷயங்களைச் சொல்லலாம்.கமலகாஸன் மட்டும் நிறைய சொல்ல முயல்வார்.சில நியதிகளுக்கு உட்பட்டு ,வரம்பு மீராமல் சொல்லும் போது,அடிப்படை மக்களுக்கு,சொல்ல வருவது புரிவதில்லை.

நாமும் இதுபோன்ற மக்களைச் சந்திக்கும் போது,முடிந்த அளவுக்கு புண் படாமல் சொல்லலாம்.அரசியல் கட்சிகள் இதைச் செய்யலாம்.ஆனால் மாநாடு கூட்டும் போது வரும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்கும் கட்சி ஏதேனும் உண்டா? அவர்களால் ஊர் அசிங்கமாவது நிறைய.....பின் எப்படி அவர்கள் மக்களைத் திருத்துவார்கள்?

நாமாவது முயல்வோமே.....!திருத்துவோம்....!திருந்துவோம்.....!

செவ்வாய், 2 ஜூன், 2009

Positive attitudes, turning problems into opportunities


One day a farmer's donkey fell into a well. The farmer frantically thought what to do as the stricken animal cried out to be rescued. With no obvious solution, the farmer regretfully concluded that as the donkey was old, and as the well needed to be filled in anyway, he should give up the idea of rescuing the beast, and simply fill in the well. Hopefully the poor animal would not suffer too much, he tried to persuade himself. The farmer asked his neighbors help, and before long they all began to shovel earth quickly into the well. When the donkey realized what was happening he wailed and struggled, but then, to everyone's relief, the noise stopped. After a while the farmer looked down into the well and was astonished by what he saw. The donkey was still alive, and progressing towards the top of the well. The donkey had discovered that by shaking off the dirt instead of letting it cover him, he could keep stepping on top of the earth as the level rose. Soon the donkey was able to step up over the edge of the well, and he happily trotted off. Life tends to shovel dirt on top of each of us from time to time. The trick is to shake it off and take a step up.

திங்கள், 1 ஜூன், 2009

எச்சரிக்கை....தள உபயோகிப்பாளருக்கு......

விமான நிலையம் மற்றும் போது இடங்களில் வலை தள உபயோகம் மறுக்க முடியாத ஒன்றாகி விட்டது.











அவ்வாறான நேரங்களில் நமது பாதுகாப்பை நாம் உறுதி செய்வாதை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.மேலே படத்தில் கணப் படும் சேமிப்பு கருவி (Storage device)
இணைக்கப் பட்டு இருக்கிறதா என சோதித்து விட்டு பின்னர் உபயோகியுங்கள்.

பெண்கள் தங்களின் பாஸ் வேர்ட் போன்றவற்றை இழக்க நேரிடலாம்.நமது பேங்க் எண்கள்,அலுவலக ரகசியங்கள் போன்றவையும் இதனால் பாதிப்பை ஏற்ப படுத்தும்.

forward மெயில் அனுப்புவது என்பது நிறைய பேருக்கு உள்ள பழக்கம்.அவ்வாறு அனுப்ப வேண்டும் என்றல் முதலில் நமது கம்பியுட்டரில் தரவிறக்கம் செய்து, பின்னர் அனுப்புங்கள்.முடியவில்லை என்றால் யாருக்கும் அனுப்பாதீர்கள்.

எந்த ஒரு பதிவிற்கும்,தேவை இல்லை எனில் சரியான பிறந்த தேதியைத் தராதீர்கள்.

கம்பியுட்டரை விட்டு விலகுமுன் மீண்டும் ஒரு முறை ,தவறாமல் சோதித்துக் கொள்ளுங்கள்.போது இடங்களில் remember me என்பதை எடுத்து விட்டு பின் உபயோகியுங்கள்.

கூகிள் டாக் தனியாக உபயோகிக்கும் போது கண்டிப்பாக log out மட்டும் போதாது.கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பெயரையும் அழிப்பது நல்லது.

சனி, 30 மே, 2009

Make u a happy man ..........today itself ....!

A management consultant, on holiday in an African fishing village, watched a little fishing boat dock at the quayside. Noting the quality of the fish, the consultant asked the fisherman how long it had taken to catch them.

"Not very long." answered the fisherman.

"Then, why didn't you stay out longer and catch more?" asked the consultant.

The fisherman explained that his small catch was sufficient to meet his needs and those of his family.

The consultant asked, "But what do you do with the rest of your time?"

"I sleep late, fish a little, play with my children, and have an afternoon's rest under a coconut tree. In the evenings, I go into the community hall to see my friends, have a few beers, play the drums, and sing a few songs... I have a full and happy life,” replied the fisherman.

The consultant ventured, "I have an MBA from Harvard and I can help you... You should start by fishing longer every day. You can then sell the extra fish you catch. With the extra revenue, you can buy a bigger boat. With the extra money the larger boat will bring, you can buy a second one and a third one and so on until you have a large fleet. Instead of selling your fish to a middleman, you can negotiate directly with the processing plants and maybe even open your own plant. You can then leave this little village and move to a city here or maybe even in the United Kingdom, from where you can direct your huge enterprise."

"How long would that take?" asked the fisherman.

"Oh, ten, maybe twenty years." replied the consultant.

"And after that?" asked the fisherman.

"After that? That's when it gets really interesting, " answered the consultant, laughing, "When your business gets really big, you can start selling shares in your company and make millions!"

"Millions? Really? And after that?" pressed the fisherman.

"After that you'll be able to retire, move out to a small village by the sea, sleep in late every day, spend time with your family, go fishing, takeafternoon naps under a coconut tree, and spend relaxing evenings having drinks with friends..."

வியாழன், 28 மே, 2009

எங்க ஊர் பரிசல் கேப்டன் ..விஜயகாந்த்...!


தயவு செய்து தயாரிப்பாளர் யாரும் புது படத்துக்கு கேப்டனை புக் பண்ணிடாதிங்க.அப்புறம் கிடைச்ச முன் பணத்துல கேரவனைப் பிடித்து டீசல் போட்டு ஊரெல்லாம் சுற்றி தன்னைப் போலவே தமிழ்நாட்டையும் ,அதன் எதிர்காலத்தையும் கருப்பாக்க முயற்சி செய்வார்.

தனியாக நின்று ஆளும் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார் என்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுகின்றது.அதையும் தாண்டி அக் கட்சி வேட்பாளர்கள் நிலை....எதை நம்பி அந்தக் கட்சியில் சீட் கேட்டார்கள் எனத்தெரியவில்லை.எத்தனை கைப்புள்ளைகைகள்.....!கேப்டனை உசுப்பேத்தி வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டம்.கூட நின்ற வருத்தப் படாத வாலிபர் சங்க நிர்வாகிகளையும் உசுப்பேத்த ஒரு கூட்டம்.

ஓட்டுப்போட்டவர்கள் எதை சாதித்தார்கள்.பிரிச்சோம்ல...................அது ஒன்னுதான் மிச்சம்.ஓட்டுக்களை எங்களுக்கு போடுங்கள் எனக் கேட்பதை விட, இந்தமாதிரி வெட்டிகளுக்கு போடாதீர்கள் எனக் கேட்பதுதான் நல்லது.இல்லை என்றால் தமிழகத்தின் எதிர்காலமே டரியலாகி விடும்.

தமிழகத்திற்கு நல்லது செய்ய அவர் நினைத்தால்....... ஒரு யதார்த்தத்தை யோசிக்கட்டும்.சுய பரிசோதனைப் போல.இதுவரை அவர் நாட்டுக்கு செய்த நல்ல விஷயங்கள் என்ன?சுய விளம்பரம் பிடிக்கவில்லை என சொல்லி சொல்லி , தான் படிப்புக்கு உதவி செய்வதை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தாயிற்று. அப்படி பட்டவர் இலவச கல்வி நிறுவனமா நடத்துகிறார்?

திரை உலகின் கதாநாயகன் என்கிற ஒரு அந்தஸ்த்து மட்டும் போதுமா.எம்.ஜி.ஆரைப் பற்றி பேசக் கூட தகுதி இல்லாதவர்கள் அவரின் இடத்த்திற்கு வர முயல்வதை என்னவென்று சொல்வது?அதனால் கிடைக்கும் ஓட்டுகள் ,எதற்கு பயன் படுகிறது.மக்களின் எதார்த்தத்தைக் கொன்று ,விரும்பாத ஆட்சி மீண்டும் வர உதவி இருக்கிறது.

ஆளும் கட்சிக்கு எவ்வளவு எதிர்ப்புகள்.அவ்வளவையும் தாண்டி ஜெயிக்க இவரும் ஒரு இமாலய காரணம்.அது மட்டும்தான் அவரின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக பிற கட்சிகளுடன் சேராமல் தனியாகத்தான் முகாரி பாடிக் கொண்டிருப்பார்.

தனியாக நின்றால் டெபாஸிட் காலியாகும் எனத் தெரிந்தே நிற்பதன்நோக்கம்,ஆளும் கட்சியின் ஐந்தாம் படை என்கிற நிலையா?அப்பா.....!சினிமாவைத தவிர வெளியில் நன்றாகத் தான் நடிக்கிறார்கள்.ஓட்டுப் போட்டவனும் ,பின்னால் சென்று கூத்தாடி சீட் பிடித்து கை காசை செலவழித்த தொண்டனும்தான் ஏமாளி........!

அடுத்த தேர்தலுக்கு முன்னாவது உண்மை நிலை வெளிவந்தால் நல்லது.இல்லை என்றால் மீண்டும் எதிர் பாராத ஒரு தேர்தல் முடிவுதான் கிடைக்கும் மக்களின் வெறுப்போடு.

எங்கோ படித்த நினைவு..இப்படியே போனால் கஞ்சித்தொட்டி திறக்கும் நிலை கேப்டனின் கட்சிக்கு வரும் என்று....!

போதும்இதோட நிறுத்திக்குவோம்....................!

முடியல..........!

ஓன்று மட்டும் உறுதி...கட்ட துரைக்கு கட்டம் சரி இல்ல.................!(கட்டதுரையை நம்பியவர்களுக்கு நேரம் சரி இல்ல)

செவ்வாய், 26 மே, 2009

மாயை...கீதையின் சாரம்


ஸர்வேந்த்ரியக்ணோபாஸம் ஸர்வேந்ரிய விவர் ஜிதம் //
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோ க்த்ரு ச //14



இந்திரியங்கள் அணைத்தின் வாயிலாக ஒளிர்வது,இந்திரியங்கள் யாவையும் அற்றது, பற்றற்றது,அனைத்தினையும் பற்றித் தாங்குவது.குணங்களே இல்லாதது எனினும் குணங்களை அனுபவிப்பது:

பல வடிவங்களை காணுதர்க்குப் பகல் வேளை உதவுகின்றது.ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொருளை விளக்க உதவுகின்றது.பல பொருட்களின் விளக்கமாக சூரியன் விளங்குகின்றது.மேலும் சூரிய வெளிச்சம் இவ்வடிவங்கள் யாவையும் அற்றது.அவ்வடிவங்களில் அது பற்றற்று இருக்கிறது.ஆத்மா சைதன்யம் இந்திரியங்களில் அத்தகைய தொடர்வுடையதாய் இருக்கின்றது.சினிமாத் திரை ஆனது படங்களை எல்லாம் தாங்குகின்றது போல சிதாகாசம் ஜகத்திலுள்ள அணைத்தையும் தாங்குகின்றது.படத்தில் காணும் விதவிதமான வர்ணங்கள் திறையினுடைய வர்ணங்கள் அல்ல.ஆனால் அத்தனை வர்ணகளையும் திரை உள்ளபடி விளக்குகின்றது.அங்கணம் முக்குணங்களும் பரமாத்மாவிடத்தும் இல்லை. ஆயினும் குணங்களை எல்லாம் விளக்கவும் ரசிக்கவும் செய்கிறது அறிவு சொரூபமாகிய சிதாகாசம்.
ரூபியும் அரூபியுமான கடவுள் ஒன்றேதான்.ஒற்றை நம்பினால் இன்னொன்றையும் நம்பினதாகும்.எரியக்கூடிய சக்தியைத் தவிர்த்து நெருப்பையும்,நெருப்பைத்தவிர்த்து எரிகின்ற சக்தியையும் சிந்திக்க முடியாது.இன்னும் பாலையும் அதன் நிறத்தையும்,சூரியனையும் அதன் கிரணங்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.அது போல குணஸ்வரூபமான ஈஸ்வரைத் தவிர்த்து நிகுன ஸ்வரூபனையும்,நிர்குண ச்வரூபனைத்தவிர்த்து குனச்வரூபனையும் சிந்திக்க முடியாது. ஸ்ரீ.ராமகிருஷ்ணர் .

செவ்வாய், 12 மே, 2009

எச்.ஐ.வி எச்சரிக்கை

சில வாரங்களுக்கு முன் திரைப்படம் பார்க்கச் சென்ற ஒருவர் ,சீட்டில் உட்காரும் பொது எதோ ஊஸி போல குத்துவதை உணர்ந்து,எழுந்து பார்க்கும் போது ,சிருன்ச்சி ஒரு குறிப்புடன் காணப் பட்டது.அதில் "இப்போது நீங்களும் HIV ஆல் பதிக்கப் பட்டுள்ளீர்கள் "என எழுதப் பட்டிருந்தது.

Disease Control Center (in Paris ) இன் சமீபத்திய ஆராய்ச்சிபடி இது போன்ற சம்பவங்கள் தற்போது அடிக்கடி நடப்பதாகவும் ,ஊஸிகளில் HIV + இருந்ததாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாங்க்களில் நாமாக படிவங்க்களை எடுக்கும் இடங்கள் போன்ற இடங்களிலும் இந்த வகை ஊசிகள் காணப படுகின்றன.பொது இடங்களில் எங்கு அமர்ந்தாலும் அமரும் இடத்தை ஒரு முறை ஆராய்ந்து விட்டு அமரச் சொல்லுங்கள். குடும்பத்தாரிடம் ,குழந்தைகளிடம் இதைப் பற்றி கண்டிப்பாக சொல்லவும்.

சமீபத்தில் டெல்லியில் திரைப்படம் பார்க்க தனது வருங்கால கணவருடன் சென்றாள் ஒரு இளம் பெண் .வேகமாக அருகில் வந்த ஒருவன் ஊஸியை அவள் கையில் சொருகி விட்டு,எயிட்ஸ் உலகிற்கு உங்களை வரவேற்கிறோம் என்ற இரு குறிப்பையும் விட்டுச் சென்றுள்ளான்.

சாதரணமாக ஆறு மாதங்களில் இருந்து கிருமி வேலை செய்ய ஆரம்பிக்கும்.ஆரோகியமான உடம்பு என்றால் ஐந்து முதல் ஆறு வருடங்கள் ஆகலாம்.இந்தப் பெண் நான்கு மாதத்தில் இறந்து விட்டாள்.எனவே எங்கேயும் கவனமாக இருங்கள்.

With Regards, Arvind Khamitkar ,
I.A.S, Director of Medical & Research Div, Chennai.