traffic analytics

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

பொக்கிஷங்கள்

பெரும்பான்மையான இந்தியா பொறியாளர்கள் ஆங்கிலப் புலமை ,கலாச்சார ம மற்றும் தொழில் நுட்பத்திறமை படைத்தவர்கள். பிறர் சொல்ல தேவை இல்லை நமக்கே தெரியும்.சில வருடங்களுக்கு முன் பரவலாக பேசப்பட்டு நடைமுறைக்கு வந்த உலகமயமாக்கல் என்பதன் எதிரொளியாக பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா வந்து, நம் தொழில் நுட்பக் கடலில் மூழ்கி நல்ல அறிவாளிகளை ப பெற்றார்கள்.

இதன் பலனாக நல்ல திறமையாளர்களுக்கான போட்டியும் அதனால் உருவான வருமான உயர்வும் நாட்டுக்கு நலமே அளித்தன. வருடத்திற்கு லாபம் 10% முதல்
15%சாதரணமாகவும் சில சமயம் 50%எட்டியதாக சொல்கிறார்கள்.

ரபிபிக் கருத்துப்படி குறைந்த அனுபவம் மற்றும் நல்ல தொழில் நுட்ப அறிவும் கொண்ட இந்தியா பொறியாளர்கள் இப்போது வருடத்திற்கு 5000 டாலர் சம்பளத்தில் கிடைக்கிறார்கள். இதே நிலை அனுபவம் நிறைந்தவருக்கு வருடம் அதிகபட்சமாக 60,000 டாலர் முதல் 100,00 டாலர் வரை செலவாகின்றது.

அவுட் சோர்சிங் முறையில் வெளி நாடுகளில் இருந்து ஆட்களை தெரி வு செய்து வேலை வாங்குவதே சிக்கன நடவடிக்கைதான். அதிலும் நம்மை சுரண்டியே பழகிப்போன வெளிநாட்டவர்களுக்கு இந்த சம்பளம் கொடுப்பதும் கூட கஷ்ட்டமாக இருக்கின்றது.

அவர்களுக்கு கிடைக்கும் பயன்களை பார்த்தால் இந்த செலவினங்கள் பெரிய விஷயமே அல்ல. இலவசமாக அல்ல. அதற்காக நம்மவர்களின் உழைப்பு கொஞ்சமா? இரவில் ஒரு நாள் விழித்தாலே அதை சரி செய்ய நான்கு நாள் போராட வேண்டியுள்ளது. நிம்மதியான தூக்கம் இல்லை. அதனால் சரியான உணவுப் பழக்கம் இல்லை. ஐந்து அல்லது ஆறு நாள் போராடி விட்டு
கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தாலும் எவ்வளவு பிரச்சனைகள்? பலரின் வயறு எரிந்து ...
அனால் எல்லாம் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.

ஆனால் எதற்காக அவர்கள் மேல் நிறைய்ய பேருக்கு எதிர்ப்பு என்று எனக்குதெரிய வில்லை. என்ன தவறு செய்தார்கள். உழைத்து சம்பாதிப்பது குற்றமா? வெளிநாட்டினரிடம் கையேந்துகிறார்கள்...! என்ன யாசகமா செய்கிறார்கள்? நிறைய மஞ்சள் விளைகிறது, ஏற்றுமதி ஆகிறது. அதுபோல தானேஇதுவும்.எத்தனை சராசரிக்கும் கீழ் உள்ள குடும்பங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு உயரத்தை எட்ட முடிந்தது இந்த வேலைகளால் தானே.

அந்த பிள்ளைகளுக்கு மரியாதை தெரிவதில்லை. அவர்கள் பெரும்பாலும்வேலைப் பளு அதிகம் உள்ளவர்கள். ஒரு நாள் அலுவலகத்தில் வேலை அதிகம்என்றாலே காட்டுக்கூச்சல் போடும் பலர் நம்மிலே உண்டுதானே. அவ்வளவுசம்பளம் கொடுப்பவன் உட்கார வைத்துக் கொடுக்க மாட்டன்.தூக்கம் இல்லாமல்வேலைப் பளுவும் அதிகம் இருப்பதுவும் அவர்கள் யாரைப் பற்றி நினைக்கமுடியாமல் போவதற்கு காரணம்.

திமிர் பிடித்து அலைகிறார்கள்....! ஏன் நமக்கு இல்லையா? இவ்வளவு சிறியவயதில் நாமும் அவ்வளவு சம்பாதித்தல் அதைவிட மோசமாக இருந்திருப்போம்!பின் ஏன் அவ்வளவு கஷ்ட்டப் பட்டு சம்பாரிக்க வேண்டும்? எனகேட்கிறவர்களுக்கு.... அதனால் தானே அவர்களை பொறாமையுடனவதுதிரும்பிப் பார்க்கிறோம் !

ஒரு திரைப் படத்தில் திரு .சத்யராஜ் அவர்கள் மிகவும் கேவலமாக பேசியதுமிகவும் வருத்தமாக இருந்தது. நான் அவரின் தீவிர ரசிகையும் கூட. சுமரியாதையில் அவர் வளர்ந்தவர்தான். கஷ்ட்டப்பட்டு முன்னேறும் நேரத்தில் எத்தனைஇடத்தில் நம்மால் சுமரியதையுடன் இருக்க முடிகின்றது? முன்னேறிய பின் நாம்எது சொன்னாலும் உலகம் கேட்கும்.

மேலும் இந்த இடத்தில் சுய மரியாதையை எங்கிருந்து வந்தது? வெள்ளைக்காரனிடம் சம்பளம் வாங்கி , அரசு உத்தியோகம் பார்த்து நம் சொந்தசகோதரனையே வதைததுதான் சுயமரியாதையை அடகு வைத்தது.இதற்க்குபலபல உத்தரனகள் உண்டு.உழைத்து சம்பாதிப்பதில் எங்கே வந்ததுசுயமரியாதை.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நடிகர்களுக்கு சமுதாயம் என்ன மதிப்புகொடுத்தது.சுய மரியாதையைப் பார்த்தால் சுய தொழில் மட்டும்தான்..... இல்லைஅங்கேயும் வடிக்கையளரைத் தாங்கத்தான் வேண்டியுள்ளது.அதனால் சுயமரியாதையையும் தொழிலையும் முடிச்சு போடாதிர்கள். உங்களுக்குஅவர்களும்தான் ரசிகர்கள்.

சொல்லவந்ததை விட்டு விட்டு எங்கேயோ போய் விட்டேன். இப்போது தனதுஅவுட் சோர்சிங் க்காக வியட்நாம் மற்றும் பிலிப்பைன்சில் கடை விரிக்கபன்னாட்டு நிறுவனங்கள் முயலுகின்றன.ஆனாலு இங்கே கிடைக்கக்கூடியஅளவு தரம் கிடைக்காமல் மீண்டும் இங்கேதான் வருகிறார்கள்.மேலும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வர வர நம்மைத்தவிர கண்டிப்பாக எங்கும் போவதற்குஇல்லை.

நம் நாட்டில் வருகின்ற அரசாவது நமது பொறியாளர்களுக்கு வேலைக்கேற்றஊதியம், உழைக்கும் நேரம் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள்சரியாக கிடைக்கின்றனவா என கவனித்தால் நமது நாட்டின் பொக்கிஷங்களைஅவர்களால் நிறையும்.
தலைப்புக்கு வந்து விட்டேன்!