traffic analytics

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

பொக்கிஷங்கள்

பெரும்பான்மையான இந்தியா பொறியாளர்கள் ஆங்கிலப் புலமை ,கலாச்சார ம மற்றும் தொழில் நுட்பத்திறமை படைத்தவர்கள். பிறர் சொல்ல தேவை இல்லை நமக்கே தெரியும்.சில வருடங்களுக்கு முன் பரவலாக பேசப்பட்டு நடைமுறைக்கு வந்த உலகமயமாக்கல் என்பதன் எதிரொளியாக பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா வந்து, நம் தொழில் நுட்பக் கடலில் மூழ்கி நல்ல அறிவாளிகளை ப பெற்றார்கள்.

இதன் பலனாக நல்ல திறமையாளர்களுக்கான போட்டியும் அதனால் உருவான வருமான உயர்வும் நாட்டுக்கு நலமே அளித்தன. வருடத்திற்கு லாபம் 10% முதல்
15%சாதரணமாகவும் சில சமயம் 50%எட்டியதாக சொல்கிறார்கள்.

ரபிபிக் கருத்துப்படி குறைந்த அனுபவம் மற்றும் நல்ல தொழில் நுட்ப அறிவும் கொண்ட இந்தியா பொறியாளர்கள் இப்போது வருடத்திற்கு 5000 டாலர் சம்பளத்தில் கிடைக்கிறார்கள். இதே நிலை அனுபவம் நிறைந்தவருக்கு வருடம் அதிகபட்சமாக 60,000 டாலர் முதல் 100,00 டாலர் வரை செலவாகின்றது.

அவுட் சோர்சிங் முறையில் வெளி நாடுகளில் இருந்து ஆட்களை தெரி வு செய்து வேலை வாங்குவதே சிக்கன நடவடிக்கைதான். அதிலும் நம்மை சுரண்டியே பழகிப்போன வெளிநாட்டவர்களுக்கு இந்த சம்பளம் கொடுப்பதும் கூட கஷ்ட்டமாக இருக்கின்றது.

அவர்களுக்கு கிடைக்கும் பயன்களை பார்த்தால் இந்த செலவினங்கள் பெரிய விஷயமே அல்ல. இலவசமாக அல்ல. அதற்காக நம்மவர்களின் உழைப்பு கொஞ்சமா? இரவில் ஒரு நாள் விழித்தாலே அதை சரி செய்ய நான்கு நாள் போராட வேண்டியுள்ளது. நிம்மதியான தூக்கம் இல்லை. அதனால் சரியான உணவுப் பழக்கம் இல்லை. ஐந்து அல்லது ஆறு நாள் போராடி விட்டு
கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தாலும் எவ்வளவு பிரச்சனைகள்? பலரின் வயறு எரிந்து ...
அனால் எல்லாம் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.

ஆனால் எதற்காக அவர்கள் மேல் நிறைய்ய பேருக்கு எதிர்ப்பு என்று எனக்குதெரிய வில்லை. என்ன தவறு செய்தார்கள். உழைத்து சம்பாதிப்பது குற்றமா? வெளிநாட்டினரிடம் கையேந்துகிறார்கள்...! என்ன யாசகமா செய்கிறார்கள்? நிறைய மஞ்சள் விளைகிறது, ஏற்றுமதி ஆகிறது. அதுபோல தானேஇதுவும்.எத்தனை சராசரிக்கும் கீழ் உள்ள குடும்பங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு உயரத்தை எட்ட முடிந்தது இந்த வேலைகளால் தானே.

அந்த பிள்ளைகளுக்கு மரியாதை தெரிவதில்லை. அவர்கள் பெரும்பாலும்வேலைப் பளு அதிகம் உள்ளவர்கள். ஒரு நாள் அலுவலகத்தில் வேலை அதிகம்என்றாலே காட்டுக்கூச்சல் போடும் பலர் நம்மிலே உண்டுதானே. அவ்வளவுசம்பளம் கொடுப்பவன் உட்கார வைத்துக் கொடுக்க மாட்டன்.தூக்கம் இல்லாமல்வேலைப் பளுவும் அதிகம் இருப்பதுவும் அவர்கள் யாரைப் பற்றி நினைக்கமுடியாமல் போவதற்கு காரணம்.

திமிர் பிடித்து அலைகிறார்கள்....! ஏன் நமக்கு இல்லையா? இவ்வளவு சிறியவயதில் நாமும் அவ்வளவு சம்பாதித்தல் அதைவிட மோசமாக இருந்திருப்போம்!பின் ஏன் அவ்வளவு கஷ்ட்டப் பட்டு சம்பாரிக்க வேண்டும்? எனகேட்கிறவர்களுக்கு.... அதனால் தானே அவர்களை பொறாமையுடனவதுதிரும்பிப் பார்க்கிறோம் !

ஒரு திரைப் படத்தில் திரு .சத்யராஜ் அவர்கள் மிகவும் கேவலமாக பேசியதுமிகவும் வருத்தமாக இருந்தது. நான் அவரின் தீவிர ரசிகையும் கூட. சுமரியாதையில் அவர் வளர்ந்தவர்தான். கஷ்ட்டப்பட்டு முன்னேறும் நேரத்தில் எத்தனைஇடத்தில் நம்மால் சுமரியதையுடன் இருக்க முடிகின்றது? முன்னேறிய பின் நாம்எது சொன்னாலும் உலகம் கேட்கும்.

மேலும் இந்த இடத்தில் சுய மரியாதையை எங்கிருந்து வந்தது? வெள்ளைக்காரனிடம் சம்பளம் வாங்கி , அரசு உத்தியோகம் பார்த்து நம் சொந்தசகோதரனையே வதைததுதான் சுயமரியாதையை அடகு வைத்தது.இதற்க்குபலபல உத்தரனகள் உண்டு.உழைத்து சம்பாதிப்பதில் எங்கே வந்ததுசுயமரியாதை.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நடிகர்களுக்கு சமுதாயம் என்ன மதிப்புகொடுத்தது.சுய மரியாதையைப் பார்த்தால் சுய தொழில் மட்டும்தான்..... இல்லைஅங்கேயும் வடிக்கையளரைத் தாங்கத்தான் வேண்டியுள்ளது.அதனால் சுயமரியாதையையும் தொழிலையும் முடிச்சு போடாதிர்கள். உங்களுக்குஅவர்களும்தான் ரசிகர்கள்.

சொல்லவந்ததை விட்டு விட்டு எங்கேயோ போய் விட்டேன். இப்போது தனதுஅவுட் சோர்சிங் க்காக வியட்நாம் மற்றும் பிலிப்பைன்சில் கடை விரிக்கபன்னாட்டு நிறுவனங்கள் முயலுகின்றன.ஆனாலு இங்கே கிடைக்கக்கூடியஅளவு தரம் கிடைக்காமல் மீண்டும் இங்கேதான் வருகிறார்கள்.மேலும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வர வர நம்மைத்தவிர கண்டிப்பாக எங்கும் போவதற்குஇல்லை.

நம் நாட்டில் வருகின்ற அரசாவது நமது பொறியாளர்களுக்கு வேலைக்கேற்றஊதியம், உழைக்கும் நேரம் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள்சரியாக கிடைக்கின்றனவா என கவனித்தால் நமது நாட்டின் பொக்கிஷங்களைஅவர்களால் நிறையும்.
தலைப்புக்கு வந்து விட்டேன்!




3 கருத்துகள்:

Thamiz Priyan சொன்னது…

நல்ல கட்டுரை! வாழ்த்துக்கள்!

Tech Shankar சொன்னது…

ஒரு அமெரிக்ககாரனுக்கு ஒரு மாசத்துக்கு 6000$ கொடுக்கிறார்கள் - குறைந்த பட்சம் சொல்கிறேன்
அதே வேலையைப் போல 2 1/2 மடங்கு அதிகம் வேலைபார்க்கும் இந்தியனுக்கு வெறும் 600$. ஆனால் எந்த சலுகையும் இல்லை.

அமெரிக்கனைப் பொறுத்தவரையில் இரவுப்பணி -extra overtime செய்தான் என்றால் - அதை mail போட்டு - நான் இன்று இரவுப்பணி செய்தேன். மிகுந்த களைப்பாக இருக்கிறது. bye என்கிறான்.

நாம் இங்கே ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்தாலும், அடுத்த நாள் வெகு விரைவில் ஆஃபீஸ் திரும்பும் அளவுக்கு அடிமைகளாகவே இருக்கிறோம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், வீடும் கடையும் ஒன்றாக உள்ளவர்கள் - அதிக நேரம் வேலை செய்தாலும், அவர்களுக்கு என்றாவது ஒரு நாள் ஒரு ப்ரேக் கிடைக்கும்.அவர்கள் நினைத்தால் குடும்பத்துடன் ஒரு திருவிழாவிற்கு சென்று பொழுதைக் கழித்துவிட்டு வரலாம். ஒரு திருமண வைபவத்துக்கு குடும்பத்துடன் சென்று திரும்பலாம்.

ஆனால் இந்த கணினி யுகத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும் எண்ணற்ற இளைஞர்களும், யுவதிகளும் - mental stress எனப்படும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இளமையிலே கண்ணாடி போட்டு, 30 வயதிற்குள்ளாகவே முதுமையை அனுபவிக்க நேரிடுகிறது.

12+ மணி நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஒரு புறம் இவர்கள் மேலும் தவறு இருக்கிறது.

தனது தலையில் சரக்கு இருப்பவர்களுமே 12 மணி நேரம் வேலை செய்யும்போது, சரக்கு இல்லாத இளையவர்கள் என்ன செய்வார்கள்? வேலை செய்கிறார்களோ இல்லையோ - நீண்ட நேரம் நள்ளிரவு வரையில் அலுவலகத்தில் உள்ளனர்.

பலரைப் பார்த்திருக்கிறேன். எல்லோரும் இப்படி பின்னிரவில் வீடு திரும்புகிறார்கள்.

எல்லாம் ஒரு insecurity feeling தான்.

அமெரிக்கனுக்கு insecurity feeling எல்லாம் கிடையாது. எல்லாவற்றையும் ஈசியாக எடுத்துக்கொள்வான். நம்மவர்களைப் பொறுத்தவரையில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதில் முனைப்புடன் இருப்பார்கள். கடன்காரர்களாக இருந்தால் ஒரு insecurity feeling. ஆனால் அமெரிக்கனைப் பொறுத்தவரை அந்த feeling இருந்தால், இத்தனை வங்கிகள் இழுத்து மூடும் நிலைமைக்கு ஆளாகி இருக்குமா?


அவன் வேலை பார்க்கும் நிறுவனமானது, அவனுக்கு டிரான்ஸ்பர் கொடுத்து அதிகச் சம்பளம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். அல்லது அதே நிறுவனம் அந்த இடத்தில் இருந்து இடம் மாறி, 50 கிலோமீட்டர் தொலைவில் வேறு ஒரு location க்கு மாறுவதாக வைத்துக்கொள்வோம்.

எத்தனை அமெரிக்கர்கள் - தங்களது இருப்பிடத்தை விட்டு கம்பெனிக்காக வேறிடத்துக்கு நகர்வார்கள்?
100க்கு 2 பேர் நகர்ந்தால் பெரிய விசயம். லண்டன் வாசிகளும் இப்படித்தான். எனது நண்பரின் நிறுவனம் லண்டனில் ஓரிடத்தில் இருந்து வேறிடத்திற்கு மாற்றப்பட்ட போது 98% ஊழியர்கள் தங்களது அருகில் இருக்கும் வேறு நிறுவனங்களில் வேலை தேடிக்கொண்டனரே தவிர இருப்பிடத்தை கம்பெனிக்காக மாற்றிக்கொள்ள முன்வரவில்லை.

இதையே இந்தியாவில் என்றால் - கம்பெனிக்காக இருப்பிடத்தை மாற்றுபவர்கள்தான் அதிகம். காரணம் insecurity.

600$ ஐ ஒரு மாதத்துக்குக் கொடுக்க முடியாமல் - வேலை செய்யும் பணியாள்ர்களை recession என்னும் பேரில் வேலையைக் காலி செய்கிறார்களே. இதைக் கேட்க ஆளில்லையா?

மூன்று ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்த பிறகு, ஊதிய உயர்வு கேட்டால் - நாங்கள் எதிர்பார்க்கும் performance உன்னிடம் இல்லை என்கிறார்கள்.

performance இல்லாத ஒருவனை எதற்காக 3 ஆண்டுகள் வைத்துக்கொள்ள வேண்டும்? 3 மாதம், அல்லது 6 மாதத்தில் விரட்டி இருக்கலாமே?

recession வரும்போது ஆளைக் காலி செய்கிறார்களே - அப்போது மட்டும் performance என்கிற ஒரு வெற்றுக் காரணத்தை உபயோகிக்கிறார்களே!

வருடத்தில் பாதி நாட்கள் bench programmer களாகவே வைத்து அறிவு விருத்தியைத் தடுத்துவிடுகின்றனர். மீதி நாட்களில் ஏதொ கொஞ்சம் கொஞ்சம் அதைச் செய், இதைச் செய் என்கின்றனர்.

கூகிளின் துணையுடன் எதைக் கொடுத்தாலும் செய்யும் வல்லமையுடன் தான் இருக்கிறோம் - நாங்கள்.

ஆனால் தொடர்ந்து வேலை செய்தால் தானே confident வரும். இப்படி பாதி நாட்கள் bench என்றால் எங்கிருந்து வரும் நம்பிக்கை?

/நம்மை சுரண்டியே பழகிப்போன வெளிநாட்டவர்களுக்கு இந்த சம்பளம் கொடுப்பதும் கூட கஷ்ட்டமாக இருக்கின்றது.

24/7 நி/றுவனங்களில் வேலை செய்வோருக்கு pickup - drop வசதி செய்து கொடுத்திருந்தனர். இப்போது அந்த வசதியும் நிறுத்தப்படுகிறது. நள்ளிரவில் எந்த ஆட்டோவைப் பிடித்து எப்படிப் பத்திரமாக வீடு திரும்புவது?

தராசு சொன்னது…

ஒரு பொறியாளான் என்ற முறையில், கன்னா பின்னானு ரிப்பீட்டேய்