traffic analytics

திங்கள், 13 ஏப்ரல், 2009

டார்லிங் ஆப் தமிழ் நாடு ......


ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர்.அறிவைச்சார்ந்து அனைவரையும் வசீகரிக்கும் நபர்கள் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும், திரைத துறையைத் தாண்டி சாதித்தவர்கள் மிகக் குறைவு.
நாம் விரும்புவதை , நாம் வெளிப்படுத்த முடியாத ஒரு விஷயத்தை நாம் நினைத்ததை விட தெளிவாக ஒருவர் சொன்னால் .....அந்த இடத்தில்தான் அவரை அன்புக்குரியவர் ஆக நினைக்க முடிகிறது.
பல வருடங்களுக்கு முன் ரவி பெர்ணார்ட் ,அவரின் பாணி தமிழ்நாட்டு அளவில் மிகவும் பிரபலமானது.அப்பாடா! நாம் நினைத்ததைக் கேட்க ஒருவர் வந்து விட்டார் என்று தோன்றியது. பின் அது பழங்கதை ஆனது.
இப்போது கோபி (நீயா நானா) ஆனால் சிக்கலான கருத்துக்களை தேர்ந்து எடுக்கிறார்க்ளே தவிர ,சிக்கலான பிரச்சனைக்குரிய கருத்துக்களைக் களைந்து கவனமுடன் கையாள்கி்றார்கள்.
எது எப்படியானாலும் தெளிவான தமிழ், நீண்ட நேர பேச்சில் எங்குமே நிற்காமல் பிரவாகமாய் ஓடும் அழகு, தெளிந்த யதார்த்தமான கருத்துக்கள் , செயற்கைத்தனம் எங்குமே தோன்றாமல்.......நம் வீட்டு பிள்ளை போல் தோற்றம்
எல்லாமே அனைவரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.தற்போது தமிழ் சானல்களில்வரும் நிகழ்ச்சிகளில் , விட்டு விடக் கூடாது என நினைக்கும் ஒரு நிகழ்ச்சி.
அதன் வெற்றி கண்டிப்பாக கோபியின் 90 சதவிகிதம் நகைச்சுவை கலந்த பேச்சுக்கு உண்டு.எல்லாதரப்பு மக்களையும் கட்டிப்போடும் நிகழ்ச்சியில் இன்னும் சற்று ஆழமான பிரச்சனைகளை அலசினால் நன்றாக இருக்கும்.ஆனால் அதுவே நிகழ்ச்சி முடிய காரணமாகி விடக் கூடாது.
எப்படியோ தரமான நிகழ்ச்சி அளிக்கும் கோபிக்கு வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

FunScribbler சொன்னது…

கோபிக்கு வாழ்த்துகள்! அவர் நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவேன்:)

தமிழ் உதயன் சொன்னது…

ஜீவா,

நன்றாக உள்ளது இந்த இடுகை..
நன்றி

தமிழ் உதயன்