traffic analytics

வெள்ளி, 27 மார்ச், 2009

தமிழ் செய்தி சானல்கள்

சரியாக தங்கள் கடமைகளை செய்கின்றனவா? பிரபலமான பிற செய்தி சானல்களின் அரங்க அமைப்புகளை பிரதிபலிப்பதை விட வேறு வேலை ஒன்றும் இல்லை என நினைக்கிறார்கள். சரியான செய்திகள் மக்களை அடைகின்றனவா? மக்களின் உண்மையான அறிவு வளர்ச்சிக்கு என்ன செயதின்றார்கள். எல்லாரும் திராவிட பாரம்பரியம்தான். அதற்க்காக தமிழ் நாட்டு செய்திகள் மட்டுமே...! அதுவும் கட்சி சார்புடன். வட இந்தியா செய்தி சானல்களில் வரும் செய்திகள் இங்கே வருவது மிகவும் கால தாமதமாக! சில விஷயங்கள் இங்கு வருவதே இல்லை.
இரண்டு சானல்களையும் பார்ப்பவர்களுக்கு புரியும். இங்கு உள்ளவர்கள் அறிவு வளர்ச்சி பெரிவது பிடிக்கவில்லையா. அல்லது நடத்துபவர்களின் வளர்ச்சியே அவ்வளவுதானா?பெரும்பான்மை மக்கள் இப்போது தமிழ் aஅங்கிலம் படிப்பவர்கள்.அறிவு வளர ஆங்கில சானல்கள் மட்டுமே பார்க்கும் நிலை உருவாவதில் நிச்சயம் சந்தோசம் இல்லை என சானல்களுக்கு புரியும்.
கொஞ்சம் கூடுதல் அக்கறை ,தரமான ,அறிவான ,நேர்மையான கட்சி சார்பற்ற நிருபர்கள் இருந்தாலே பாதி பிரச்சனை தீரும். மீதி பிரச்சனை அது நடத்துபவர்களின் அறிவு சார்ந்த விஷயம்.மன சாட்சியுடன் சொல்லுங்கள் தமிழில் எது சரியான செய்தி சானல்.? வளரும்.............!

கருத்துகள் இல்லை: