traffic analytics

செவ்வாய், 31 மார்ச், 2009

அரசியல் நாகரீகம் .......!


தன்னை விட்டு விலகி போனபின் போனவர்கள் பற்றி பேசாமல் இருப்பதுதான் , உடன் இருந்தோர்க்கு நலம். பந்தை சுவற்றில் எறிந்தால் திரும்பவும் வரத்தானே செய்யும். தன்னை பழமை மிக்க தலைவராக, எல்லோரும் மதிக்கும் தலைவராக முன்னிறுத்த முயலும்போது,அரசியல் நாகரீகத்தை முதலில் கடைபிடிக்க வேண்டாமா? ஒருவர் சொல்லித்தான் அடுத்தவரை பற்றி தெரிய வேண்டியது இல்லை.மக்கள் முட்டாள்கள் இல்லை,மீடியாக்களும் சாதரணமாக இல்லை!
நீங்கள் ஒன்றை சொன்னால் எதிர்பவர் ஒன்று சொல்ல, பாதிப்பு என்னவோ உங்களுக்குக்தான். முதலில் சொன்ன உங்கள் வாதம் அடங்கி...... எதிராக வந்த வாதம் நிலைத்து போய் ...தேவையா இதெல்லாம்?
பழயதை மக்கள் நினைக்க ஆரம்பித்தால் நீங்கள் யாராவது மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா? புலம்புவதை விடுங்கள்.மக்கள் உள்ளத்தில் நல்லதை அவர்களே எடுத்து கொள்வார்கள்.உள்ள பெயரையும் கெடுத்துக்கொள்ளதீர்கள்.உடன் இருப்பவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்களா தமையிடத்தில்? அனைத்து கட்சிகளிலும் இதுதான் நடக்கிறது? நல்லவர்களை, புத்திசாலிகளை,மனிதாபிமானம் மிக்கவர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.அனைத்து தேர்தல்களிலும் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள். நடக்கிற காரியமா?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Very funny, but made me think....