traffic analytics

ஞாயிறு, 3 மே, 2009

10 Things Men Don't

Share with women..........
1.Men never admit to the number of beers they've had.The girl friend gets an inflated figure,the wife,a conservative estimate.
2.Women clutch a man's hand.Shudder and close thei eyes when they watch a horror movie.A man will never admit to wanting to do the same.
3.Men never walk on a treadmill.They only jog.
4.The cell phone is carefully guaded.Because guioty or not,woman don't belive there could be an innocent wxplanation behind a call or an sms.
5.Bringing office problems home are a strict no-no.Menlike to belive they can sort out problems on their own.
6.woman alone are brand conscious.No self-respecting man will admit to caring about what lable he sport.
7.A man may see jwellery or a dress that could look good on a woman,but never admit to noicing it.It would go against his idea cool.
8.Reaching the airport an hour early is not something a man would like to advertise.He will always 'just about make it in time'.
9.It's easy to win brownie points with a woman while claiming to be on an empty stomach.Admitting to having eaten a decent meal just does't win the same responce.
10.Only women go ga-ga over Shah Rukh Khan.Men can respectably only like Amir Khan - and only intellectually ofcourse.

FEEL FRESH

சனி, 2 மே, 2009

வேதங்கள் ...


உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.
எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது.
"புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்"என்பது விவேகானந்தரின் எண்ணம்.
அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.
உபநிஷதங்கள், பிரம்மா சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீதை முஉன்றும் 'பிரஸ்தான த்ரயம்'என்று வழங்கப் படுகின்றன.
அறுதி உண்மைகளில் உபநிஷதங்களே சிகரத்தைத தொட்டதாக கருதுகின்றனர்.
உபநிஷங்கள் பலவானாலும்,108 பொதுவாக கொள்ளப் படுகின்றன. அவற்றில் ஈஸ,கேன,கட,பிரச்சன,முண்டக,மாண்டூக்ய, ஐதரேய,தைத்திரீய,சாந்தோக்ய ,பிருகதரன்யா , சுவேதஸ்வதார , கௌசீதகி , மகாநாராயண, மைத்ராயணி இவை பதினான்கும் முக்கியமானைவை.


உபநிஷதம் ஐதரேய, கௌசீதகி , வேதம் ரிக்

உபநிஷதம் ஈஸ,கட,தைத்திரீய,
பிருகதரான்யா, சுவேதஸ்வதார , வேதம் யஜுர்
மைத்ராயணி, மகாநாராயண.

உபநிஷதம் கேன,சாந்தோக்ய வேதம்சாம

உபநிஷதம் பிரச்சன,முண்டக,மாண்டூக்ய வேதம்அதர்வண

யஜூர் வேதத்தில் சுக்ல,கிருஷ்ணா என இரு பிரிவுகள் உண்டு.கிருஷ்ணா யஜுர் வேதத்தில் தைத்த்ரிய ஆரண்யகம் என்ற பகுதியில் கட உபநிஷதம் பற்றி கூறப் பட்டுள்ளது.சுடர் என்ற முனிவரால் அருளப் பட்டது.

வாழ்க்கை தத்துவங்களையும் , புரிதல்களையும் பிற மதங்களிலும் ,சமய புத்தகங்களையும் மேற்கோள்களையும் பார்க்கும் நாம் , நம் மதத்தின் பெருமைகளை தேடி நாடினால் , அதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இறப்புக்கு பின் என்ன நடக்கும்.....ஒரு ஆராய்ச்சி பூர்வமான அலசல் எமனுடன் இருந்தால்....இருந்தால் என்ன? இருக்கிறதே? அதுதான் கட உபநிஷதம்.

வாஜசிரவஸ் என்ற பணக்காரர் செய்த யாகம் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகளின் முலம் உண்மை புகட்டப் படுகின்றது.

நசிகேதன் என்கிற சிறுவன், வாஜசிரவசின் மகன்.தந்தையின் யாக நியதிகளை சரியாக கடை பிடிக்கவில்லை என்பதைக் கண்ட அவன் தந்தையின் தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டான். அதை அவன் தந்தை விரும்பாததால் அவன் எம தர்மனிடம் செல்ல நேர்ந்தது. அவன் மூன்று வரங்களை கால தேவனிடம் பெற்றான்.அதைப் பற்றி கூறுவதுதான் இந்தக் கட உபநிஷதம்.

வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை படித்துப் பாருங்கள்.வாழ்வின் பார்வையும் சாவின் முழுமையும் புரியும். இன்னும் வளரும்.........................!





வியாழன், 30 ஏப்ரல், 2009

கபீர் தாசர்!


இந்துக்களின் புனித நகரான வாராணாசியில் வாழ்ந்தவர் இவர்.ஆனால் பிராமணர் அல்லாத பிரிவைச் சேர்ந்தவர்.அவர்கள் நாலாவது வர்ணமாகிய சூத்திரர்கள். எனவே தீண்டத் தகாதவர்.பிறப்பால் அவரின் மதம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.ஆம் அவர் முறை தவறி பிறந்த குழந்தை .

முறைகேடாக பிறந்த குழந்தை கிடையாது.முறை கேடான பெற்றோர்தான் உண்டு.கங்கைக் கரையில் விட்டு சென்ற அக்குழந்தை ,மிகச் சிறந்த குரு ராமனந்தரின் கையில் கிடைத்தது.அதி காலையில் குளிக்கச் சென்ற குருவின் பாதத்தை குழந்தையின் கைகள் பற்றிக் கொள்ள , குழந்தையை அள்ளிக் கொண்டு ஆசிரமம் சென்றார்.

அங்கு அவருக்கு ஆயிரக் கணக்கான சீடர்கள்.குழந்தையை எங்காவது அனாதை இல்லத்தில் சேருங்கள் அல்லது எங்களிடம் கொடுத்து விடுங்கள் என பெரும் பிரச்சனை. ஆனால் ராமனந்தரோ "என் பாதத்தை பற்றி சரணடைந்த குழந்தையை
மறுத்து உதறவே முடியாது"என மறுத்து விட்டார்.

பலமான வாக்கு வாதம்.குழந்தையின் கையில் கபீர் என எழுதி இருந்தது.அது ஒரு இஸ்லாமிய பெயர்.கடவுளின் நூறு நாமங்களில் ஒன்றுதான் அது.ஆனால் தொண்ணுற்று ஒன்பது நாமங்களின் பெயர்கள் மட்டுமே இருக்கும்.அந்தக் கடைசி நாமத்தை உச்சரிக்கும் தகுதி நமக்கு இல்லாமையால் அந்த நாமம் மட்டும் விடு பட்டிருக்கும்.அக் குழந்தை தன் பாதத்தைப் பிடித்ததால் அதைத் தனது சீடனாகவே நினைக்க ஆரம்பித்தார்.

பிற்காலத்தில் தன்னையும் விட சிறந்த குருவாக ஆக குழந்தை வரும் என அவர் நம்பினார்.ஆனால் முறை தவறி,உயர் ஜாதி அல்லாமல் பிறந்த அவரிடம் யாரும் சென்று பேசவோ, கேள்வி கேட்கவோ விரும்பவில்லை. ஆனால் மற்றவர்கள் அவரைப் பற்றி பேசும் போது அதை குறித்துக் கேட்டுக் கொண்டனர்.

பக்தி இயக்கம் ஆரம்பித்து தனது கருத்துக்களை பரப்பலானர்.இரு மதங்களின் கலவையாகவுன் ,கீதையின் சாராம்சமாகவும் இருந்தது அவரின் பேச்சுகள்.ஒவ்வொரு வாழ்க்கையும் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா இரண்டும் கலந்தது என்கிற போதனையை அடிப்படையாக கொண்டார்.

அவரின் கவித்துவம் பலராலும் இன்றுவரை வியந்து போற்றும் விஷயமாக இருக்கிறது.எளிமையான ஹிந்தியில் உயரிய கருத்துக்கள்.

ஒ சீடனே, எங்கே என்னை தேடுகிறாய்?
பார்!அதை எல்லாம் தாண்டி நான் இருக்கிறேன்.


நான் கோவிலிலும் இல்லை!மசூதியிலும் இல்லை!
காபாவிலும் இல்லை! கைலஷிலும் இல்லை!
கொண்டாட்டங்களிலும் இல்லை!யோகாவிலும் இல்லை!
உண்மையைத் தேடும் கலையை கொண்டவர்களே
கண நேரத்தில் காணலாம் என்னை!
ஒ....சாதுவே !
கடவுள் ஒவ்வொரு சுவாசத்தின் சுவாசத்திலும் இருக்கிறான்!
(மொழி பெயர்ப்பில் பொருள் மாறவில்லை.லயம் குறைந்தால் மன்னிக்கவும்)

எளிமையாக விளக்கும் அவரின் கவிதைகள் இன்றுவரை மிகப் பிரபலம்.பலர் ராம நாமத்தை அடிக்கடி உச்சரிப்பார்கள்.பலர் இஸ்லாமிய கடவுளின் நாமத்தை உச்சரிப்பார்கள்.எல்லாமே உலகைப் படைத்தக் கடவுளின் ஒரே நாமம்தான்.எனப் பொருள் படும் "கோயி போலே ராம் ராம் கோயி........"எனும் பாடல்.

ஞானிகளைப் பற்றி சிறிய இடத்தில் முழுவதும் எழுத இயலாது.ஆனாலும் சிறு தகவல் ,அறிந்து கொள்வது நல்லது தானே...!



செவ்வாய், 28 ஏப்ரல், 2009

Shivajiraje Bhosale boltey..திரை விமரிசனம்.





இதுதான் சமுதாய நோக்கு.....!

வேற்று மாநிலத்தவரை உள்ளே விடக்கூடாது என்கிற வலுவான கோஷமும் , அதை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளும் நிறைந்த மகாராஷ்ட்ராவில் மாராட்டியர்களுக்கான ஒரு திரைப்பபடம்.யாரையும் வசை பாடவும் இல்லை.எதிர்க்கவும் இல்லை.

இதுவரை மராட்டிய திரை வரலாற்றில் இல்லாத அளவில் ,திரை இடப்பட்ட ஒரு வாரத்திற்குள் 15 மில்லியன் ரூபாய் பெற்றுள்ளது.ஆடம்பர கண்ணாடி செட்டிங்க்ஸ், ரஹ்மான் மியூசிக்,உயர் ரக தொழில் நுட்ப ஆடம்பரம் ஒப்பனையில் புரட்சி இத்யாதிகள் இல்லாமல் ...........யாரையும் வசை பாடாமல்,கண் சிவக்க வசனம் பேசாமல்,மரத்தை சுற்றாமல்.....தன்னுடைய ,தன் குலத்தின் பெருமையைப் பற்றி மட்டுமே பேசும் ஒரு படம்.

தின்கர் மாருதி அவர்களின் (shivajiraje bhosale boltey) பேசுவது சிவாஜி போஸ்லே ...என்கிறபடம். பிற மாநிலத்தில் இருந்து அங்கு வந்து குடியேறியவர்களைப் பார்த்து தாழ்வு மனப் பன்மையில் பொறுமும் ஒரு சாதாரண குடிமகனை ஆற்றுப் படுத்துவதாக படம். காந்தியின் குரல் முன்னா பாய் படத்தில் வருவது போல் , சக்கரவர்த்தி சிவாஜியின் மூலமாக , மகாராஷ்டிர மக்களின் பெருமைகளை உணர வைப்பதுதான் கதை.

பால கங்காதர திலகர் முதல் அம்பேத்கர் ,வீர சாவர்க்கர் என தங்களின் பெறுமைகளை சொல்லி அதில் வெற்றியும் பெறுகிறது.காரணமே இல்லாமல் தோன்றும் தாழ்வு மனப்பான்மைக்கு மருந்தாக இப்படம் அமைகிறது.குஜராத்திகள்,உடுப்பிகள்(தென் இந்தியர்கள்) சிக்குகள்,உ.பி.மக்கள் என அணைவர் மேலும் தேவையில்லாத வெறுப்பில் இருப்பவர்களுக்கு...

"உங்கள் தோல்விகளுக்கு பிறரைக் காரணம் சொல்லாதீர்கள் "
-என உணர்த்தியதே படத்தின் வெற்றியாக கொள்ளப்படுகின்றது.

இந்தப் படத்தைப் பார்த்து இருவர் மனம் மாறினாலும் அதுவே முழு வெற்றி என தயாரிப்பாளர் திரு .மாஞ்சரேக்கர். கதாநாயகன் தின்கர் ஆக சச்சின் கேடேகரும் , சிவாஜியாக மஞ்சரேக்கரும் நடித்திருக்கிறார்கள்.

உயரிய எண்ணங்களுடன் மகாராஷ்டிர மண்ணின் மைந்தர்களுக்காக எடுக்கப் பட்ட படமானாலும் எல்லா தரப்பினரும் பார்க்க வேண்டிய படமாகத்தான் இருக்கிறது.இன துவேஷங்களைப் போதிக்காத நல்ல படங்களை எந்த மொழியில் இருந்தாலும் பார்க்கலாமே!

திங்கள், 27 ஏப்ரல், 2009

தேவாவுடன் just relaxe..........!

அரசியல் நிகழ்வுகளால் வெறுப்படைந்து இருப்பவர்களுக்கு, just RELAX.வேறென்ன செய்ய முடியும்?

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

எங்கும் வியாபகமாய் இருப்பவன்....1


யா ஏனம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைனம் மன்யதே ஹதம் !
உபௌ தொ விஜாநீதோ நாயம் ஹந்தி ஹன்யதே !!
19
......பகவத் கீதை

பொருள் :ஆத்மாவைக் கொலையாளி என்றும், கொலையுண்பான் என்றும் எண்ணும் இருவரும் அறியாதார். ஆன்மா கொல்வதுமில்லை, கொலையுண்பதுமில்லை.

விளக்கம் : செல்வத்தில் பெரும் பற்றுடைய ஒருவனது செல்வம் திடீரென்று அழிந்து போனால் "நான் தொலைந்தேன்"என்கிறான்.செல்வம் தன் சொரூபமாகாது. தன்னுடையது ஒன்று அழிய, மனிதன் தானே அழிந்து போவதாக நினைக்கிறான். தன்னுடையது என்பது மமகாரம்.தடித்த மமகாரம் அகங்காரம் போன்று ஆகி விடுகின்றது.தேகத்தைத் தான் என்று எண்ணுவது அகங்காரம்.மாறுபடும் தன்மையது தேகம்.மாறாப் பெரு நிலையில் வீற்றிருப்பது ஆத்மா சைதன்யம்.தோன்றிய மேகம் மறையும்பொழுது ஆகாசம் எப்படி அழிவதில்லயோ, அப்படி ஆக்கை அழியும் போது ஆத்மாவும் அழிவதில்லை.